சென்னை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இது அதிகபட்ச எண்ணிக்கையாகும். இன்று மாலை வெளியிடப்பட்டுள்ள சுகாதாரத்துறையின் புள்ளிவிவரத்தில் இந்த தகவல் உறுதியாகி உள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முதல் முறையாக ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1012 பேருக்கு இன்று ஒரே நாளில் சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 17,598 என்ற அளவில் உள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது.