Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorized100% கட்டணம் வசூலித்ததாக 34 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

100% கட்டணம் வசூலித்ததாக 34 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் 100 சதவீத கட்டண வசூலில் ஈடுபட்ட 34 தனியார் பள்ளிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பெற்றோர்களிடம் புகார்களை பெறுவதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மின்னஞ்சல் முகவரியை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து 108 பள்ளிகள் மீது, இதுவரை புகார் வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments