Thursday, April 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்சென்னையில் காய்கறி விலை உயர்வு

சென்னையில் காய்கறி விலை உயர்வு

சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருவதால் காய்கறிகளின் விலையும் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருக்கிறது. வாரத்தின் முதல் நாளான இன்றும் கடும் விலையேற்றம் காணப்படுவதால் சென்னை வாசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை இன்று (அக்டோபர் 19) 45 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 25 ரூபாயாக மட்டுமே இருந்தது.

வெங்காயம் விலையும் 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று 50 ரூபாயாக இருந்தது. அவரைக்காய் விலை 45 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பீன்ஸ் விலை 30 ரூபாயாகவும், பீட்ரூட் விலை 50 ரூபாயாகவும், கத்தரிக்காய் விலை 20 ரூபாயாகவும் உள்ளது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:
தக்காளி – ரூ.45
அவரைக்காய் – ரூ.45
பீன்ஸ் – ரூ.45
பீட்ரூட் – ரூ.30
பாகற்காய் – ரூ.30
கத்தரிக்காய் – ரூ.20
முட்டைகோஸ் – ரூ.25
குடை மிளகாய் – ரூ.40
கேரட் – ரூ.80
காளிபிளவர் – ரூ.30
சவுசவு – ரூ.12
தேங்காய் – ரூ.35
வெள்ளரிக்காய் – ரூ.12
முருங்கைக்காய் – ரூ.55
இஞ்சி – ரூ.70
பச்சை மிளகாய் – ரூ.35
கருணைக் கிழங்கு – ரூ.25
கோவைக்காய் – ரூ.15
வெண்டைக்காய் – ரூ.25
மாங்காய் – ரூ.55
நூக்கல் – ரூ.23
வெங்காயம் – ரூ.70
உருளைக் கிழங்கு – ரூ.40
முள்ளங்கி – ரூ.15
புடலங்காய் – ரூ.20
சுரைக்காய் – ரூ.20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments