Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தமிழகத்தில் 16ம் தேதி கல்லூரிகளை திறப்பது குறித்து 12ம் தேதி முடிவு - அமைச்சர் அன்பழகன்

தமிழகத்தில் 16ம் தேதி கல்லூரிகளை திறப்பது குறித்து 12ம் தேதி முடிவு – அமைச்சர் அன்பழகன்

தமிழகத்தில் 16ம் தேதி கல்லூரிகளை திறப்பது குறித்து 12ம் தேதி முடிவெடுத்து அறிவிக்கப்படுமென உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் முதல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதில் பல கல்லூரிகள் கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு முகாம்களுக்கு பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா குறைந்ததால், மீண்டும் கல்லூரிகளை திறக்க அரசு அண்மையில் அனுமதித்தது.

இதையடுத்து அங்கிருந்த கொரோனா பாதித்தோர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு, கிருமி நாசினி மூலம் சுத்தபடுத்தும் பணி நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments