சென்னை
ஊட்டியில் அரசு மருத்துவமனை அமைக்க வனப்பகுதியில் 1,838 மரங்கள் வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
1,838 தைல மரம் உள்ளிட்ட அயல்நாட்டு மரங்களை வெட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கல்லூரி அமையவுள்ள 25 ஏக்கரில் மண் சார்ந்த மரங்கள் ஏதும் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. உதகையில் வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக வாழப்பாடியில் மரங்கள் நடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. விஞ்ஞான முறையில் மரங்கள் வெட்டப்பட வேண்டும். நீதிமன்ற ஒப்புதல் பெற்ற மரங்களை ஏலம்விட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.