Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇலங்கைசுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில் உள்ள தமிழ் வர்த்தகருக்கு மிரட்டல்

சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில் உள்ள தமிழ் வர்த்தகருக்கு மிரட்டல்

சூரிச் மாநிலத்தின் மத்தியில் உள்ள தமிழ் வர்த்தகரின் சில்லறை கடையில் நாசிகள் என்று அடையாளமிடப்பட்டு வர்த்தகரை கடையினுள் வைத்து எரிப்பதாகவும் அவரது குழந்தைகள் தொடர்பிலும் அவரின் கடை கதவுகளில் வாசகங்கள் எழுதி மிரட்டல் விடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து கடமையின் உரிமையாளர் இவ்விடயத்தை காவல்துறையினர் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுபோன்ற விடயங்களை சிங்களவர்கள் யாரும் செய்திருக்கலாம் என கருதுகின்றனர். சுவிஸில் வர்த்தக ரீதியில் தமிழர்கள் அதிகளவில் உயர்ந்த நிலையில் உள்ளமை யாவரும் அறிந்த விடயம்.

அதுமட்டுமல்லாமல் தொழில் ரீதியில் ஐரோப்பியாவில் தமிழர்கள் அதிக அளவில் பல துறை சார்ந்த தொழில்கள் செய்கின்றமை அங்குள்ள அரசுகளையே உயர்வாக பார்க்க செய்துள்ளது. இப்படியான நிலையில் இவ்வகையான மிரட்டல்கள் பல்வேறு கோனங்களில் பார்க்கப்படுகின்றது.

உதாரணமாக ஐ.நா மனித உரிமைகள் கூட்டு தொடர்பில் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் அங்கு புலம்ப்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பங்களிப்புகள் அதிகம், அதில் ஈழத்தமிழர்களின் நோக்கத்தை திசை திருப்பும் நோக்கத்துடன் இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments