Sunday, September 8, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஅடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் பிரதமர் மோடி - கார்கே கிண்டல்.

அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் பிரதமர் மோடி – கார்கே கிண்டல்.

புதுடில்லி

அடுத்த ஆகஸ்ட் 15ல் இதே செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என பிரதமர் மோடி பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்த காங்., தலைவர் கார்கே, ‛அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் பிரதமர் மோடி’ எனக் கூறினார்.

இன்றைய சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, அடுத்த முறை ஆகஸ்ட் 15ம் தேதி இந்த செங்கோட்டையிலிருந்து நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளை உங்கள் முன் வைப்பேன் என பேசினார்.

இதற்கு பதில் அளித்து, காங்., தலைவர் கார்கே, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அடுத்த ஆண்டு மீண்டும் தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றுவார். ஆனால் அவர் அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் என கூறினார்.

ஒவ்வொரு நபரும் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மீண்டும் வருகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் வெற்றி பெற வைப்பது, தோல்வி அடைய செய்வது மக்கள் கையில் உள்ளது.

2024ல் மீண்டும் தேசியக் கொடியை ஏற்றுவேன் என்று கூறுவது ஆணவத்தை காட்டுகிறது.

சுதந்திர தினத்தன்று கூட எதிர்க்கட்சிகள் குறித்து கருத்து தெரிவிப்பது சரியல்ல.

அவர் எப்படி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார் என்று அவர் கூறினார்.

- Advertisment -

Most Popular

Recent Comments