Saturday, July 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்வடகொரியா முழுவதும் புதிய விதிமுறை அமல் - கிம் ஜாங்கின் வினோத ரூல்ஸ்

வடகொரியா முழுவதும் புதிய விதிமுறை அமல் – கிம் ஜாங்கின் வினோத ரூல்ஸ்

பியாங்யாங்

வட கொரியாவில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வடகொரியா முழுவதும் புதிய விதிமுறை ஒன்றை அதிபர் கிம் ஜாங் உன் அமல்படுத்தியுள்ளார். பெண்கள் இனி லிப்ஸ்டிக் போட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடு வடகொரியா. இந்த நாட்டின் தலைவராக கிம் ஜாங் உன் உள்ளார். அதிபர் ஆட்சி நடைபெறும் வடகொரியா ஒரு கம்யூனிச நாடு என்று சொல்லப்பட்டாலும் அங்கு தற்போது சர்வாதிகார ஆட்சியே நடைபெற்று வருகிறது.

அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன்னுக்கு எதிராக மூச்சு விட முடியாது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் மோதல் போக்கை கையாண்டு வரும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை போன்றவற்றை நடத்தி வருகிறார். கிம் ஜாங் உன்: சர்வதேச நாடுகளுடன் மொதல் ஒருபக்கம் என்றால் உள்நாட்டில் பல விசித்திரமான கட்டுப்பாடுகளை விதித்து வடகொரியாவை பெரிய இரும்புத்திரை கொண்டு மூடி வைத்து இருக்கிறார் கிம் ஜாங் உன். அதாவது வெளியுலக தொடர்பு எதுவும் இன்றி திறந்த வெளி சிறையை போல வடகொரிய மக்கள் வாழ்ந்து வரும் அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

பல்வேறு கட்டுப்பாடுகள்:

மேற்கத்திய நாட்டு படங்களை பார்க்க தடை, சிகை அலங்காரத்திற்கு தடை என வடகொரியாவில் பல விசித்திர கட்டுப்பாடுகள் உண்டு. அதேபோல இந்த கட்டுப்பாடுகளை மீறினால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு பல கொடூர தண்டனைகளும் விதிக்கப்படும். மக்கள் எப்படி உடை அணிந்து கொள்ள வேண்டும், எப்படி முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்பது வரைக்கும் அங்கு கட்டுப்பாடுகள் உள்ளன.

- Advertisment -

Most Popular

Recent Comments