அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி மாநகராட்சி பணிக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கியத்தில்...
பொதுப்பணித்துறை சார்பில் மாதம் தோறும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் இருப்பு கணக்கிடப்படுகிறது.
ஏப்ரல் மாத கணக்குப்படி, அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 0.55 மீட்டர் சரிந்துள்ளது.
தஞ்சை, நாகை, அரியலுார், ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் சிறிதளவு சரிவு கண்டறியப்பட்டுள்ளது.
பிற மாவட்டங்களில் நிலத்தடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற, புலவர் சே. செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்), ஆர்.எம். சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர், கழக சட்டதிட்ட விதிகளின்படி, மாவட்டச் செயலாளர் பொறுப்பு உட்பட. கழகத்தில் வகித்து வருகின்ற அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றார்கள்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொள்ளும். அந்தக் குழு அளிக்கின்ற அறிக்கையின்படி, இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே வீட்டிலிருந்தே பணி செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
அந்நாடு பொருளாதார சிக்கலில் உள்ள நிலையில், அவர், பிரதமர்களுக்கான அலறி மாளிகை எனக்கு வேண்டாம், அரசின் செலவினங்களை குறைக்கும் பொறுப்பு எனக்கும் உள்ளது.
இந்த நடவடிக்கையை அமைச்சர்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு, இலங்கை அரசு அவசரகால மருத்துவ உதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் மருந்து தேவையில் 85% இறக்குமதி மூலம் பெறப்பட்டு வந்த நிலையில், அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால், மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கிறது.
இதனால், அவசரத் தேவையுள்ள மருந்துகளின் பட்டியலை இந்தியாவுக்கு அனுப்பி உதவி கேட்டிருக்கிறது.
கொழும்பு
இலங்கையில் இதுநாள் வரை பெட்ரோல், டீசல், உணவுப் பொருட்களுக்கு மட்டுமே கடுமையான நெருக்கடி நிலவி வரும் நிலையில், இப்போது அங்கு அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மருத்துவ அவசர நிலையை அறிவித்துள்ளது அரசு மருத்துவ அலுவலர்கள் கூட்டமைப்பு.
மின்வெட்டு, அத்தியாவ மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அந்நாட்டு மக்கள் பலர் அவசர அறுவை சிகிச்சைகளைக் கூட செய்து கொள்ள முடியாத இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் மருத்துவ அலுவலகர்கள் கூட்டமைப்பானது அவசர பொதுக் கூட்டத்தை நடத்தியது. அதில் நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பின்னர் பேசிய இலங்கை அரசு மருத்துவ அலுவலர்கள் கூட்டமைபபின் (GMOA) செயலர் மருத்துவர் ஷனல் ஃபெர்னாண்டோ, "நோயாளிகளின் உயிரைக் காக்க வேண்டும் என்பதற்காகவே மருத்துவ அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிர்வாகத் திறனின்மையாலே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். இதேநிலை நீடித்தால் இன்னும் நிலைமை...
மறைந்த திரைப்பட நடிகர் விவேக் அவர்களின் மனைவி அருட்செல்வி இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்.
இச்சந்திப்பில் நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென்று கோரிக்கை கடிதம் அளித்தார்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் நாளை (ஏப்ரல் 13-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் உலக அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தியேட்டர்களில் வெளியாகாது என்று மாநகராட்சி திரையங்க உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளனர்.
திரையங்க உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பான பிரச்னையின் காரணமாக இந்த முடிவை கரூர் திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் மாநகராட்சிகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது என்ற அறிவிப்பு விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பழம்பெரும் நடிகை KPAC லலிதா காலமானார். அவருக்கு வயது 74.
உடல்நலக் குறைவால் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த லலிதா செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா்.
தமிழில் காதலுக்கு மரியாதை, பரமசிவன், கிரீடம், அலைபாயுதே, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
குருபூஜையன்று தருமபுரம் ஆதீனத்தைப் பல்லக்கில் பக்தர்கள் தூக்கிச் செல்வார்கள்.
ஆதீனங்கள் பல்லக்கில் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமென்பதால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். மடத்துப் பிரச்சினையை மத பிரச்சனையாக ஆக்கியது யார்?
அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆன்மீகவாதி பேசக்கூடாதா? என, மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
அன்னதானம் வழங்கும் திருக்கோயில்களில் இன்று முதல் இலையில் உணவு வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திங்கள் முதல் வியாழக்கிழமை வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும்.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம் உணவுப்பொட்டலங்களாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
292வது மடாதிபதி அருணகிரிநாதர் மறைவை தொடர்ந்து 293வது மடாதிபதியாக ஹரிஹரர் தேசிகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2019ம் ஆண்டில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரால் இளவரசராக முடிசூட்டப்பட்டவர் ஹரிஹரர் தேசிகர்.
மதுரை ஆதீனமாக ஹரிஹரர் தேசிகருக்கு 10 நாளில் முடிசூட்டப்பட உள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கியா நிறுவனம் முதல் EV6 என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.
இந்தக் கார் மிகவும் எளிமையானதாகவும், நவீன தொழில்நுட்ப வசதியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
காருக்கான முன்பதிவு மே 26, முதல் தொடங்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் ஆப்பிள் iPhone4s வாங்கியவர்கள் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இச்சாதனத்தில் iOS9யை தரவிறக்கியபோது, மொபைலின் செயல்திறன் குறைந்ததாகவும் மற்றும் தவறாக விளம்பரப்படுத்தப்பட்டது எனவும் வழக்கில் கூறப்பட்டது.
இதனால் ஆப்பிள் நிறுவனம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1,154 நஷ்டஈடு தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது.
143 பொருட்களின் ஜிஎஸ்டி வரிவிகிதத்தை 18%ல் இருந்து 28% ஆக ஒன்றிய அரசு உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளியானது.
மேலும் இதுகுறித்து மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில் கருத்து கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் மாநில அரசுகளிடம் எந்தக் கருத்தும் கேட்கவில்லை என ஜிஎஸ்டி கவுன்சில் மறுப்பு தெரிவித்தது.
ராஜஸ்தான்
ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான் என்று ராஜஸ்தானில் நடைபெற்று வரும் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஹிந்தி திணிப்பு பற்றி சர்ச்சை நிலவி வரும் நிலையில் மாநில மொழிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என அவர் பேசிவருகிறார்.
மேலும் உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது எனவும் மோடி கூறியுள்ளார்.
டெல்லி
பெகாசஸ் விசாரணை குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் மாதம் 20-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் 2020-ம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மசூதிகளில் இருந்து ஒலிப்பெருக்கிகளை அம்மாநில அரசு அப்புறப்படுத்தி வருகிறது.
இதனிடையே, அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதோன் மாவட்டத்தைச் சேர்ந்த இர்ஃபான் என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இர்ஃபான் மேல்முறையீடு செய்தார். அதில், "மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை வைப்பது இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமை" என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவானது நீதிபதி விவேக் குமார் பிர்லா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மசூதிகளில் ஒலிப்பெருக்கி வைத்திருப்பது அடிப்படை உரிமை கிடையாது. தவறான புரிதலுடன் இந்த மனு தாக்கல் செய்யபட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" எனக் கூறினார்.
முன்னதாக, மசூதிகளில் வைக்கப்பட்டிருக்கும் ஒலிப்பெருக்கிகளில் இருந்து வரும் சத்தம் அதிகமாக இருப்பதாகவும், இதனால் தாங்கள்...
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பாதுகாப்பு வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில், பாதிரியார் ஒருவர் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு வீரர்கள் தங்கியிருக்கும் லண்டன் ஷீட் தெருவில், ராணுவத்தினரைத் தவிர யாரும் நுழையமுடியாது.
பாதிரியார் ஒருவர் நுழைந்தது பற்றி, பிரிட்டன் ராணுவம் விசாரணையை துவக்கியுள்ளது.
கடுமையான கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்ட 50 முதல் 70 வயதிற்குட்பட்டவர்களின் அறிவுத் திறனை லண்டன் விஞ்ஞானிகள் பரிசோதித்தனர்.
உள்நோயாளிகளாக சேர்ந்து சிகிச்சை பெற்று திரும்பிய 46 நபர்களிடம் செய்யப்பட்ட ஆய்வின் மூலம், 50 முதல் 70 வயதினருக்கு அறிவுத்திறன் இழப்பின் அளவு ஐ.க்யூ அளவில் 10 புள்ளிகள் அளவுக்கு இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபர் பதவிக்கு 2 சுற்று தேர்தல் நடைபெறும்.
முதல் சுற்று அதிபர் தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. நேற்று (ஏப்ரல் 24) 2வது சுற்று தேர்தல் நடந்து முடிந்தது.
வாக்கு எண்ணிக்கையில் மேக்ரான் 58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென் 41.8 சதவீதம் வாக்குகள் பெற்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.
சென்னை அணியின் நட்சத்திர வீரரும், மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரருமான டிவைன் பிராவோ இன்றைய போட்டியில் 9 ரன்களை எடுத்தால், ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.
கால்பந்து வரலாற்றில் உலகிலேயே அதிக கோல்கள் அடித்து போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோலடித்த ரொனால்டோ கால்பந்து வரலாற்றில் மொத்தமாக இதுவரை 807 கோல்கள் அடித்துள்ளார்.
இதற்கு முன்பு ஆஸ்திரேலிய - செக் குடியரசு வீரர் ஜோசப் பிகான் 805 கோல்கள் அடித்ததே உலக சாதனையாக இருந்து வந்துள்ளது. தற்போது அந்த சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.
மும்பை வீரர் இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார்.
இலங்கை ஆல் ரவுண்டர் வனிந்து ஹசரங்கா 10.75 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்திய வீரர் அம்பதி ராயுடு 6.75 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார்.
மும்பை அணியின் ஆல் ரவுண்டர் குர்னல் பாண்டியா, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் 8.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் 6.50 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்தியாவின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 8.75 கோடி ரூபாய்க்கு சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை 5.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார்.
ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் மேத்திவ் வேட்...
ஷவர்மாவை சூடாக்கும்போது வெளியில் உள்ள பகுதி மட்டுமே வேகிறது. இறைச்சி போதிய அளவில் வேகாமல் உள்ளதுதான் பிரச்சனை.
கோழிக் கறியைக் குளிர்பதனப் பெட்டியில் வைக்காமல் வெளியிலேயே வைத்திருப்பதால் அவை கெட்டுப் போகின்றன.
வெளிநாட்டு உணவுகளைச் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் தரமான கடைகளைத் தேர்ந்தெடுத்து அளவாகச் சாப்பிட வேண்டும் என, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆந்திராவில் 2019ம் ஆண்டு கிராம வேளாண்மை உதவியாளர் பதவிக்கு மனுதாரரின் மனுவை பரிசீலித்து 2 வாரங்களுக்கு உரிய உத்தரவை பிறப்பிகுமாறு வழக்கு ஒன்றில் ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி நடவடிக்கை எடுக்காத 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 1 மாத சிறை, ரூ.2000 அபராதம் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை கீரைத்துறை பகுதியில் உள்ள அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன்.
இந்த பள்ளிக்கு 2 ஆசிரியைகள் பணி மாறுதலாகி வந்தனர். இந்த 2 ஆசிரியைகளுக்கும் பாலியல் ரீதியிலான தொல்லை கொடுத்த ஜோசப் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதை அறிந்து மாறுவேடத்தில் திரிந்த தலைமை ஆசிரியர் ஜோசப்பை காவல்துறை கைது செய்துள்ளது.
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சர்க்கரை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
ஆனால் காபி குடிக்கும் போது இனிப்பு தேவையெனில், அவர்களுக்கு கருப்பட்டி சிறந்த தீர்வாக இருக்கிறது.
பனை மரத்திலிருந்து உருவாக்கப்படும் கருப்பட்டி உணவு வகைகளில் இன்றியாமையாததாகும்.
இதில் உள்ள சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது.
தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது பனை. ஆனால், பனை தொடர்பான மக்களின் வழக்காறு என்பது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருந்துவந்திருக் கிறது. ‘பனை மரத்துல பாதி வளர்ந்திருக்கான், ஆனால் ஒண்ணுமே தெரியலை’, ‘பனை மரத்துக்குக் கீழ நின்னு பாலைக் குடிச்சாலும், ஊரு தப்பாத்தான் பேசும்’ என்று பனை மற்றும் பனை சார்ந்த விஷயங்கள் ஒரு நபரை அல்லது ஒரு விஷயத்தை இழிவுசெய்யவே பயன்பட்டு வருகிறது.
ஈரானின் சபாஹர் துறைமுக ரயில் திட்டத்தில் இருந்து இந்தியா விலக்கப்பட்டதை போல கொழும்பு துறைமுக திட்டத்திலும் இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது.
ஈரானின் சபாஹர் துறைமுகத்தை இந்தியாவும் , அதற்கு அருகே பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை சீனாவும் தங்கள் வசமாக்கின. இதன் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் வழிப்பாதையை இருநாடுகளும் தங்களுக்கு சாதகமாக மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டன.
ஆனால் காலப்போக்கில் ஈரானும் சீனாவும் நெருக்கமான உறவை மேற்கொள்ள தொடங்கின. இன்னொருபக்கம் இந்தியாவோ, அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுடனான நட்புறவில் தேக்க நிலையை உருவாக்கிக் கொண்டது. இதனால் சபாஹர் துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை விலக்குவது என ஈரான் முடிவு செய்திருக்கிறது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனைய திட்டத்தை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயக்படுத்துவதற்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது. இதனால் இந்த திட்டத்தில்...