கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...
சென்னையில் மாடு மற்றும் மாட்டு உரிமையாளர்கள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அடைக்க 2 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் 5 மாட்டு தொழுவங்கள் புதிதாக உருவாக்கப்படும்.
அரும்பாக்கத்தில் சிறுமி மீது மாடு முட்டியதற்கு பிறகு சாலையில் சுற்றி திரிந்த 126 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு யாழ்ப்பாணத்திலிருந்து புதுச்சேரிக்குக் கப்பல் சேவையைத் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக இலங்கை துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
யாழ்ப்பாணம் - காங்கேசன் துறை துறைமுகத்தையும் தமிழ்நாட்டின் புதுச்சேரியையும் இணைக்கும் வகையில் கப்பல் சேவை அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்த சேவைக்கு இந்திய அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த பயணிகள் சொகுசு கப்பல் சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும், நட்புறவுடன் இருக்க வாய்ப்பாகவும் அமையும் எனவும், இதனைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிலிருந்து திருகோணமலை மற்றும் கொழும்பு வரையும் இந்த கப்பல் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும். அதற்காகத் துறைமுகங்களில் சுங்கம், குடிவரவு மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சொகுசு கப்பலில் 400 பயணிகள் வரை பயணம் செய்யலாம். யாழ்ப்பாணத்திலிருந்து புதுச்சேரிக்கு மூன்றரை மணி நேரம் கடலின் அழகை ரசித்தபடி பயணிக்கும்...
கொழும்பு
போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்ட இலங்கை அதிபர் மாளிகையை சீரமைக்க ரூ.8.17 கோடி செல்வாகும் என பொறியியல் துறை அறிக்கை தாக்கல் செய்ததுள்ளது.
மாளிகையின் வரலாற்று ஓவியங்கள், உடற்பயிற்சி மைய உபகரணங்கள், வாகனங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர திட்டம் வகுத்துள்ளார். இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் பேசியாதாவது:
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நமது நிலைமையை விவரிப்பதற்கு டில்லி வர விரும்புவதாக பிரதமர் மோடியிடம் நான் தெரிவித்தேன். நமக்கு இந்தியா செய்துவரும் உதவியை எப்போதும் பாராட்டுகிறேன். நமது மறுகட்டமைப்பு முயற்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை.
இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.
லியோ படத்தின் “நா ரெடி” பாடலில் எச்சரிக்கை வாசகம் சேர்ப்பு
விஜய் சிகரெட் பிடிப்பது போன்று வரும் காட்சிகளில் “புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், உயிரை கொல்லும்” என்ற வாசகம் சேர்ப்பு.
பாடலுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் எச்சரிக்கை வாசகத்தை சேர்த்தது படக்குழு.
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்த கஸ்டடி திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆனது. காவல்துறை அதிகாரியாக நாகசைதன்யா நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல் முறையாக வெங்கட் பிரபு தெலுங்கு படம் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு தமிழ் சினிமாவிலும் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்குக் காரணம் வெங்கட்பிரபுவின் கடைசி படமான மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிதான் காரணம்.
அப்படி நம்பி சென்ற ரசிகர்களை மொத்தமாக ஏமாற்றியுள்ளதாம் கஸ்டடி திரைப்படம். படத்தில் ஒரு நிமிடம் கூட ரசிக்கும் படியாக எதுவுமே இல்லையாம். வழக்கமாக வெங்கட் பிரபு யுவன் கூட்டணியில் பாடல்கள் ஹிட்டாகும். இந்த முறை இந்த கூட்டணியோடு இளையராஜா சேர்ந்தும் கூட பாடல்களும் ஹிட்டாகவில்லை என்பது ரசிகர்களின் கருத்து.
திருவள்ளூர்
இந்த சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ3.924 கோடி மதிப்புடைய கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு பெரியபாளையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பத்து நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ₹300 கட்டணத்தில் பரமபத வாசல் வழியாக தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி பண்டிகை வைஷ்ணவ பக்தர்களுக்கு சிறப்பு வாய்ந்த பண்டிகையாகும். மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா பெருமாள் கோவில்களில் நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா பகல்பத்து உற்சவம் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
குருபூஜையன்று தருமபுரம் ஆதீனத்தைப் பல்லக்கில் பக்தர்கள் தூக்கிச் செல்வார்கள்.
ஆதீனங்கள் பல்லக்கில் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமென்பதால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். மடத்துப் பிரச்சினையை மத பிரச்சனையாக ஆக்கியது யார்?
அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆன்மீகவாதி பேசக்கூடாதா? என, மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓலா தொழிற்சாலையில் தயாராகும் குறைந்த விலை மின்சார இருசக்கர வாகனம் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
S1X என்ற புதிய மாடல் இ-ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் போட்டி நிறுவனங்களை காட்டிலும் குறைந்த விலையில் ரூ.80,000-க்கு இந்த இ-ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது.
2 கிலோ வாட் பேட்டரியுடன் கூடிய ஓலா S1X ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஒரு வாரத்திற்கு சலுகை விலையிலான ரூ.80,000-க்கும், அதன்பிறகு ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
S1X மாடல் இ-ஸ்கூட்டர்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கிலோமீட்டர் வரை செல்லும் எனவும், அதிகப்படச வேகம் மணிக்கு 90 கிலோமீட்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.16,884 கோடி நிகர லாபத்தை ஈட்டி SBI வரலாற்று சாதனை படைத்துள்ளது.
குறைந்த வாராக் கடன் & அதிக வட்டி வருமானம் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு பொதுத்துறை வங்கியான SBI மிக அதிக காலாண்டு லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
இதன் காரணமாக மொத்த வருமானம் ரூ.1,08,039 கோடியாக உயர்ந்துள்ளது.கடந்த 2022-23 நிதியாண்டில் இதே காலப்பகுதியில் ரூ.6,068 கோடி மட்டுமே ஈட்டியது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,407.79 கோடியாக இருந்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.1,032.84 கோடி நஷ்டத்தை சந்தித்து இருந்தது. அதேபோல நிதியாண்டின் நிகர லாபம் ரூ.2,414.29 கோடியாக இருந்துள்ளது
. மேலும் பங்கு ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்யமாக இருந்தாலும் எம்.டி, எம்.எஸ். படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று ஒன்றிய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்திருக்கிறது.
“ஏற்கெனவே பதிவு செய்துள்ள விண்ணப்பத்தாரர்கள் மீண்டும் பதிவுசெய்யத் தேவையில்லை. இருப்பினும், அவர்கள் தங்கள் விருப்பங்களைத் திருத்த அனுமதி அளிக்கப்படும். அவர்கள் மருத்துவ கலந்தாய்வுக் குழு இணையதளத்துடன் தொடர்பு கொள்ளலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு தான் தகுதி என்று ஒன்றிய பாஜக அரசு விடாப்பிடியாக இருந்து வரும் நிலையில், தற்போது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவித்திருப்பதன் மூலம் நீட் முடிவு...
அமைச்சர் உதயநிதி தலைக்கு அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் 10 கோடி அறிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார்.
தேசிய அரசியலில் இது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பாஜகவை சேர்ந்த தலைவர்கள் பலரும் இதற்கு கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி இழிவாக பேசியதாக காரணம் காட்டி அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் கோபமடைந்துள்ளார்.
உத்திரபிரதேச மாநில அயோத்தியை சேர்ந்த பரமஹன்ஸ ஆச்சார்யா என்பவரை உதயநிதி படத்தை வாளால் தீயிட்டு கொளுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோடு நில்லாமல் அவர், தொடர்ந்து உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
துவாரகா விரைவு நெடுஞ்சாலை திட்டம் ஒரு கிலோ மீட்டருக்கு ₹18 கோடியாக இருந்த செலவு ₹250 கோடியாக உயர்த்தி ஊழல் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் 600 சுங்கச்சாவடிகளில் 5 சுங்கச்சாவடிகளில் மட்டும் சிஏஜி ஆய்வு செய்ததில் ₹132 கோடி ஊழல் அம்பலமாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஆய்வு நடத்தினால் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தெரிய வரும் என்று சிஏஜி தெரிவித்துள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டொரான்டோ
இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து அந்நாட்டின் பொது பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கையில், இதுபோன்ற வீடியோக்களை பரப்புவது கண்டிக்கத்தக்கது, அருவருப்பானது. இது கனடா மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. கனடாவில் வெறுப்புணர்வுக்கு இடமில்லை.
ஆக்கிரமிப்பு, வெறுப்பு, மிரட்டல் அல்லது பயத்தை துாண்டும் செயல்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை. அவை நம்மைப் பிளவுபடுத்த மட்டுமே உதவுகின்றன.
கனடா மக்கள், ஒருவரையொருவர் மதிக்கவும், சட்டத்தை பின்பற்றும்படியும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய கடல் எல்லையை தாண்டி சட்டவிரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கிருந்த 198 இந்திய மீனவர்கள் நேற்று (மே 12) விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் முதலில் லாகூருக்கு அனுப்பப்பட்டனர். பின் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
துருக்கி நாட்டின் அப்சின் நகரில் 23 கிமீ தென்மேற்கே இன்று (ஏப்.17) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவானது. நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. சேதம் குறித்த விவரங்கள் வெளிவரவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டியில் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சதமடித்து, பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினர்.
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 83 பந்துகளில் சதம் விளாசினார். 2 சிக்ஸர்ஸ், 6 பவுண்டரிகளை அடித்து மிரட்டினார். மொத்தம் 94 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதன் மூலம் அதிவேகமாக 13,000 (267 இன்னிங்ஸ்) ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி. அதேபோல சர்வதேச ஒருநாள் போட்டியில் கோலியின் 47வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் கொழும்பு பிரமேதசா மைதானத்தில் (2012, 2017, 2017 மற்றும் 2023) தொடர்ச்சியாக 4 ஒருநாள் போட்டிகளில் சதத்தை பதிவு செய்துள்ளார் விராட் கோலி.
ருமேனியாவில் நடக்கும் சர்வதேச வலுதூக்கும் போட்டியில் திருச்சியை சேர்ந்த மாணவர் மற்றும் மாணவி சாதனை படைத்துள்ளனர்.
வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ள +2 மாணவரான தினேஷ் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.
அதேபோல கல்லூரி மாணவி ஜீவிதா வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய சர்வதேச அளவிலான வலுதூக்கும் போட்டி செப்.3ஆம் தேதி வரை நடக்க உள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 500 தொடரின் காலிறுதி சுற்றில் PV சிந்து அதிர்ச்சிகர தோல்வி அடைந்தார்.
சிட்னியில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கிடம் 2-21, 17-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் பிரியன்ஷு ரஜாவத் 21-13, 21-8 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஸ்ரீகாந்தை வீழ்த்தினார்.
சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,266 கனஅடியில் இருந்து 3,423 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி முதல் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையிலிருந்து அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 5,583 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 6,266 கன அடியாக இருந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில் இன்று மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,266 கனஅடியில் இருந்து 3,423 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 54.42 அடியிலிருந்து...
செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஆனால் வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
தமிழுக்கு சுண்ணாம்பு, சமஸ்கிருதத்துக்கு வெண்ணெய் என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
2023-24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று(ஜூன் 28) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் 78,000 பேர் மருத்துவ படிப்பில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘மேலும் படிக்க’ என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு ஜூலை 2ம் வாரம் நடைபெற வாய்ப்புள்ளது.
வீட்டில் வாஸ்துபடி வேப்ப மரம், தென்னைமரம், மாமரம், பலாமரம், பாக்குமரம், கொன்றைமரம், நார்த்தை மரம், மாதுளை மரம், துளசிச்செடிகள் மற்றும் கொடி வகைகளில் மல்லிகை மற்றும் முல்லை, மணிபிளான்ட் கொடி வகைகளை தாராளமாக வளர்க்கலாம்.
இவை வீட்டிற்கு ஐஸ்வர்யம் தரும். இந்த செடிகளை தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் அமைத்தல் சிறந்தது.
முள்ளிவாய்க்காலின்
அவலங்களின் எண்ணிக்கை
விண்ணின் விரிவைத் தொடும் ..
நினைக்கும் பொழுது
நெஞ்சம் பதறும்
மனவெளியில்
தீச்சுவாலை வீசும்
ஒன்றா! இரண்டா! – அது
இனவழிப்பின் உச்சமல்லவா!
அந்தக் கொடூரத்தை
அனுபவித்து தீயில் வெந்தவர்கள்
வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்..
எஞ்சியவர்கள்
சொந்தங்களையும்
சொத்துக்களையும் இழந்து
நடைப்பிணமாக வாழ்கின்றனர்..
நினைவு நாளில்
பூப்போட்டு தீபமேற்றி
வணங்கத்தான் முடியும்..
மாண்டவர் வருவாரோ?
காணாமல் போனோர்
கிடைப்பாரோ?
ஆண்டுகள் தொடர்கின்றன..
ஏக்கமும் தொடர்கின்றது..
நிர்வாணப்படுத்தி
முழங்காலில் நிற்க வைத்து
பிடரியில் சுட்ட காட்சியின்
நிழல் படத்தைப் பார்த்த
புலம்பெயர்ந்த சகோதரன் ஒருவன்
துடி துடித்து அழத்தான் முடிந்தது..
என்ன செய்யப்போகிறோம்?
இன்னும் நண்டுச் சட்டியில்
நண்டுகள் இழுக்கும் கதையாய்
வாழப் போகிறோமா? – இல்லை
உலக அரங்கில்
ஒன்று கூடித் திரளப்போகிறோமா?
நம்மை நாம்தான்
விடுவிக்க முடியும்..
நமது விடியல் நம் கையில்
ஒன்றிணைவோம்
நின்று வெல்வோம்.
-அகரப்பாவலன்-
உடல் சுறுசுறுப்பாக இருக்கக் காலையில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் மெட்டபாலிசம் தூண்டப்படுகிறது. மன அமைதி உண்டாகிறது.
இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, டெஸ்டோஸ்டிரான் வெளியீட்டைத் தூண்டுவதன் மூலம் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.