தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகும்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 117 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக கோவையில் 11 பேருக்கும், சென்னையில் 10 பேருக்கும், திருப்பூரில் 6 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், தொற்று பாதிப்பால் உயிர் பலி ஏதும் இல்லை’ என சுகாதாரத்துறை கூறியுள்ளது.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி க்கு வீராங்கனை நன்றி தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பெண்களுக்கான கூடைப்பந்து பயிற்சி மையத்தை வாரணாசிக்கு மாற்றி உத்தரவு வந்ததை தொடர்ந்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.அனுராக் தாகூர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரினார்.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மயிலாடுதுறை பயிற்சி மையத்தினை வாரணாசிக்கு மாற்றியமைக்கும் உத்தரவினை ரத்து செய்து இந்திய விளையாட்டு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பின்னனியில் மயிலாடுதுறை பயிற்சி மையத்தில் தங்கி பயின்று வரும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஹர்ஷிதா மற்றும் அவரது பெற்றோர்கள் கார்த்திக், சோபியா ஆகியோர் நாடளுமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்;
பயிற்சி மையம் வாரணாசிக்கு சென்றால் தங்களது மகள்களின் எதிர்கால கல்வி மற்றும் விளையாட்டு கனவுகள் என்னவாகும் என்கிற பெரும் கவலையை போக்கும் விதமாக தமிழக...
இலங்கை அரசு யாழ்ப்பாணத்திலிருந்து புதுச்சேரிக்குக் கப்பல் சேவையைத் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக இலங்கை துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
யாழ்ப்பாணம் - காங்கேசன் துறை துறைமுகத்தையும் தமிழ்நாட்டின் புதுச்சேரியையும் இணைக்கும் வகையில் கப்பல் சேவை அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்த சேவைக்கு இந்திய அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த பயணிகள் சொகுசு கப்பல் சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும், நட்புறவுடன் இருக்க வாய்ப்பாகவும் அமையும் எனவும், இதனைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிலிருந்து திருகோணமலை மற்றும் கொழும்பு வரையும் இந்த கப்பல் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும். அதற்காகத் துறைமுகங்களில் சுங்கம், குடிவரவு மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சொகுசு கப்பலில் 400 பயணிகள் வரை பயணம் செய்யலாம். யாழ்ப்பாணத்திலிருந்து புதுச்சேரிக்கு மூன்றரை மணி நேரம் கடலின் அழகை ரசித்தபடி பயணிக்கும்...
கொழும்பு
போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்ட இலங்கை அதிபர் மாளிகையை சீரமைக்க ரூ.8.17 கோடி செல்வாகும் என பொறியியல் துறை அறிக்கை தாக்கல் செய்ததுள்ளது.
மாளிகையின் வரலாற்று ஓவியங்கள், உடற்பயிற்சி மைய உபகரணங்கள், வாகனங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர திட்டம் வகுத்துள்ளார். இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் பேசியாதாவது:
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நமது நிலைமையை விவரிப்பதற்கு டில்லி வர விரும்புவதாக பிரதமர் மோடியிடம் நான் தெரிவித்தேன். நமக்கு இந்தியா செய்துவரும் உதவியை எப்போதும் பாராட்டுகிறேன். நமது மறுகட்டமைப்பு முயற்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்த கஸ்டடி திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆனது. காவல்துறை அதிகாரியாக நாகசைதன்யா நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல் முறையாக வெங்கட் பிரபு தெலுங்கு படம் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு தமிழ் சினிமாவிலும் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்குக் காரணம் வெங்கட்பிரபுவின் கடைசி படமான மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிதான் காரணம்.
அப்படி நம்பி சென்ற ரசிகர்களை மொத்தமாக ஏமாற்றியுள்ளதாம் கஸ்டடி திரைப்படம். படத்தில் ஒரு நிமிடம் கூட ரசிக்கும் படியாக எதுவுமே இல்லையாம். வழக்கமாக வெங்கட் பிரபு யுவன் கூட்டணியில் பாடல்கள் ஹிட்டாகும். இந்த முறை இந்த கூட்டணியோடு இளையராஜா சேர்ந்தும் கூட பாடல்களும் ஹிட்டாகவில்லை என்பது ரசிகர்களின் கருத்து.
“தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது என மல்டி பிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவிப்பு
தமிழகத்தில் நேற்று மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் நாளை முதல் திரையிடப்படாது என அறிவிப்பு
சட்ட ஒழுங்கு பிரச்சினை இருப்பதாலும், படத்திற்கு வரவேற்பு இல்லாததாலும் திரையரங்க நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தளபதி 67. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான அறிவிப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் நேற்றிலிருந்து வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு தனிவிமானம் மூலம் நேற்று ஸ்ரீநகர் சென்றது.
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இதில் படத்தின் நடிகர்கள், தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரவிக்குமார் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
திருவள்ளூர்
இந்த சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ3.924 கோடி மதிப்புடைய கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு பெரியபாளையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பத்து நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ₹300 கட்டணத்தில் பரமபத வாசல் வழியாக தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி பண்டிகை வைஷ்ணவ பக்தர்களுக்கு சிறப்பு வாய்ந்த பண்டிகையாகும். மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா பெருமாள் கோவில்களில் நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா பகல்பத்து உற்சவம் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
குருபூஜையன்று தருமபுரம் ஆதீனத்தைப் பல்லக்கில் பக்தர்கள் தூக்கிச் செல்வார்கள்.
ஆதீனங்கள் பல்லக்கில் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமென்பதால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். மடத்துப் பிரச்சினையை மத பிரச்சனையாக ஆக்கியது யார்?
அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆன்மீகவாதி பேசக்கூடாதா? என, மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,407.79 கோடியாக இருந்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.1,032.84 கோடி நஷ்டத்தை சந்தித்து இருந்தது. அதேபோல நிதியாண்டின் நிகர லாபம் ரூ.2,414.29 கோடியாக இருந்துள்ளது
. மேலும் பங்கு ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் பெங்களூருவில் பல தளங்களை கொண்ட அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. மாத வாடகை 2.44 கோடி ரூபாய்.
பிரபல ஆப்பிள் நிறுவனம் பெங்களூருவில் உள்ள பிரிஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனத்தினால் கட்டப்பட்ட அலுவலக கட்டடத்தில் பல தளங்களை 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இதற்கான மாத வாடகை 2.44 கோடி ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.
பொருளாதார மந்த நிலையை கருத்தில்கொண்டு, செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களுக்கு வழங்கி வந்த போக்குவரத்து, மசாஜ், கபே, உள்ளிட்ட |பல்வேறு சேவைகளை கைவிட கூகுள் நிறுவனம் முடிவு.
அலுவலகங்களில் இனி ஸ்டேபிளர், செலோடேப்கள் கூட வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது.
ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் சந்தித்து மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
ஒடிசா ரயில் விபத்தை விபத்தைக் காரணம் காட்டி விமானங்களின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று மத்திய அரசு, விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
ரயில் விபத்துக்கான தமிழ்நாடு அரசு உதவி எண் 044 28593990, 9445869843 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் அறியலாம் ரயில் விபத்து தொடர்பாக உதவி பெற 9445869848 என்ற வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் NCCSA அவசரச் சட்டத்தை பாஜக அரசு இயற்றியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள AAP, டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டுமென அறைக்கூவல் விடுத்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக் கொடுத்துப் பொருட்களை வாங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டமாகும்.
2016 இல் பண மதிப்பு இழப்பு என்ற பெயரில் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அரசு அறிவித்தது. தங்களிடமிருக்கும் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தது. அப்படி மாற்றுவதற்காக வங்கிகளின் முன்னால் கோடிக் கணக்கான மக்கள் கால் கடுக்க நின்றனர். வரிசையில் நிற்கும்போதே பலர் உயிரிழந்தனர். 2016 திசம்பரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி
திரு. டெரக் ஓப்ரியன் வெளியிட்ட புள்ளிவிவரம் 105 பேர் அப்படி வங்கிகளின் முன்னால் வரிசையில் காத்திருக்கும்போதும், அதிர்ச்சியிலும் இறந்தனர் எனக் கூறியது....
இந்திய கடல் எல்லையை தாண்டி சட்டவிரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கிருந்த 198 இந்திய மீனவர்கள் நேற்று (மே 12) விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் முதலில் லாகூருக்கு அனுப்பப்பட்டனர். பின் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
துருக்கி நாட்டின் அப்சின் நகரில் 23 கிமீ தென்மேற்கே இன்று (ஏப்.17) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவானது. நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. சேதம் குறித்த விவரங்கள் வெளிவரவில்லை.
சிட்னி
தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல் அளித்துள்ளது. தங்களையும் தாக்க முகமது முயற்சித்ததால் அவரை துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில் புள்ளிகள் அடிப்படையிலான பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
காம்பவுண்ட், ரீகர்வ் என்ற இரு பிரிவுகளில் 6 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் என 14 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது.
ஆடவர் தனிப்பிரிவில் அபிஷேக் வர்மாவும், மகளிர் தனிப்பிரிவில் மார்கூவும் தங்க பதக்கம் வென்றனர். காம்பவுண்ட் மகளிர் & ஆடவர் பிரிவு போட்டிகளில் இந்தியா தனித்தனியே தங்கம் வென்றது.
மும்பை
மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக இளையோர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
19 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெண்கல பதக்கம் வென்றது. இந்திய வீராங்கணைகள் சஹானா, யஷ்வினி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.
ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை எலான் மஸ்க் நியமித்துள்ளார்.
இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் இனி வணிக நடவடிக்கைகள், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவேன்” என தெரிவித்துள்ளார்.
ரிசார்ட்டுகளில் சட்டவிரோதமாக செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டிருந்தால் குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்
அருவிகளில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என கேள்வி
வணிக நோக்கில் செயல்பட்ட ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவு
குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு துணைபோன அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் ஆணை
அரசால் அமைக்கப்பட்ட குழு 3 மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவையில் பொங்கல் பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
மேலும் நெல்லை, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் செய்யப்படும் பானைகளும் கோவைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. உலோக பாத்திரத்திரங்களுக்கு பதிலாக மண்பானையில் பொங்கல் வைக்க வேண்டும் என்பதே மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
முள்ளிவாய்க்காலின்
அவலங்களின் எண்ணிக்கை
விண்ணின் விரிவைத் தொடும் ..
நினைக்கும் பொழுது
நெஞ்சம் பதறும்
மனவெளியில்
தீச்சுவாலை வீசும்
ஒன்றா! இரண்டா! – அது
இனவழிப்பின் உச்சமல்லவா!
அந்தக் கொடூரத்தை
அனுபவித்து தீயில் வெந்தவர்கள்
வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்..
எஞ்சியவர்கள்
சொந்தங்களையும்
சொத்துக்களையும் இழந்து
நடைப்பிணமாக வாழ்கின்றனர்..
நினைவு நாளில்
பூப்போட்டு தீபமேற்றி
வணங்கத்தான் முடியும்..
மாண்டவர் வருவாரோ?
காணாமல் போனோர்
கிடைப்பாரோ?
ஆண்டுகள் தொடர்கின்றன..
ஏக்கமும் தொடர்கின்றது..
நிர்வாணப்படுத்தி
முழங்காலில் நிற்க வைத்து
பிடரியில் சுட்ட காட்சியின்
நிழல் படத்தைப் பார்த்த
புலம்பெயர்ந்த சகோதரன் ஒருவன்
துடி துடித்து அழத்தான் முடிந்தது..
என்ன செய்யப்போகிறோம்?
இன்னும் நண்டுச் சட்டியில்
நண்டுகள் இழுக்கும் கதையாய்
வாழப் போகிறோமா? – இல்லை
உலக அரங்கில்
ஒன்று கூடித் திரளப்போகிறோமா?
நம்மை நாம்தான்
விடுவிக்க முடியும்..
நமது விடியல் நம் கையில்
ஒன்றிணைவோம்
நின்று வெல்வோம்.
-அகரப்பாவலன்-
உடல் சுறுசுறுப்பாக இருக்கக் காலையில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் மெட்டபாலிசம் தூண்டப்படுகிறது. மன அமைதி உண்டாகிறது.
இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, டெஸ்டோஸ்டிரான் வெளியீட்டைத் தூண்டுவதன் மூலம் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
1639 ஆகஸ்ட் 22ம் நாள் மதராசப் பட்டினத்தை ஈஸ்ட் இந்தியா கம்பெனி சென்னப்ப நாயக்கன் என்பவரிடமிருந்து வாங்கிய நாள். சென்னை என அழைப்பதை விட இதனை மதராஸ் அல்லது மதராசபட்டினம் என்று அழைப்பதே பொருத்தம்.
பழமைவாய்ந்த நகரமான சென்னைக்கு வயது 655 என்கின்றனர்.
இந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதியுடன் சென்னைக்கு வயது 655 ஆகிறது.
பென்னேஸ்வர மடம் கிராமம் பெண்ணையாற்றங்கரையில் உள்ள பெரிய பாறையின் சரிவில் விஜயநகரப் பேரரசின் மன்னன் கம்பண உடையர், தம் ஆட்சியாண்டு சகம் 1291 ஆம் ஆண்டுப் பிலவங்க வருஷம் பூர்வபட்சம் ரோகிணி நட்சத்திரத்திற்கு நிகரான வரலாற்று ஆண்டு 1367 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதியன்று பொறித்த கல்வெட்டில் மாதரசன் பட்டணம் (‘Maadharasan Pattanam’) (சென்னை) குறித்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 31 வரிகளில் அமைந்த இக்கல்வெட்டுத் தமிழ் மொழியில் தமிழ் வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு விஜயநகரப்...