சென்னை
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.
நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...
ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு செல்லும் அவர், தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று பார்வையிடுகிறார். அங்கிருந்தபடி திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட உள்ளார். பின்னர் விவேகானந்த கேந்திரா சென்று பாரத மாதா கோயிலில் வழிபடுகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார்.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், நாளை கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு வர சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு:
1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம்.
2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி.
3. காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை.
4. காவலர்களின் குழந்தை காப்பகங்கள் மேம்படுத்தப்படும்
5. கலைஞர் காவல் கோப்பை விருது
6. குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல்.
7. பெண்களுக்கு தனி துப்பாக்கி சுடும் போட்டிகள்.
8. ஆண்டுதோறும் பெண் காவலர்களுக்கு தேசிய மாநாடு.
9. பணி ஆலோசனை குழு அமைக்கப்படும்.
ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு யாழ்ப்பாணத்திலிருந்து புதுச்சேரிக்குக் கப்பல் சேவையைத் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக இலங்கை துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
யாழ்ப்பாணம் - காங்கேசன் துறை துறைமுகத்தையும் தமிழ்நாட்டின் புதுச்சேரியையும் இணைக்கும் வகையில் கப்பல் சேவை அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்த சேவைக்கு இந்திய அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த பயணிகள் சொகுசு கப்பல் சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும், நட்புறவுடன் இருக்க வாய்ப்பாகவும் அமையும் எனவும், இதனைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிலிருந்து திருகோணமலை மற்றும் கொழும்பு வரையும் இந்த கப்பல் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும். அதற்காகத் துறைமுகங்களில் சுங்கம், குடிவரவு மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சொகுசு கப்பலில் 400 பயணிகள் வரை பயணம் செய்யலாம். யாழ்ப்பாணத்திலிருந்து புதுச்சேரிக்கு மூன்றரை மணி நேரம் கடலின் அழகை ரசித்தபடி பயணிக்கும்...
கொழும்பு
போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்ட இலங்கை அதிபர் மாளிகையை சீரமைக்க ரூ.8.17 கோடி செல்வாகும் என பொறியியல் துறை அறிக்கை தாக்கல் செய்ததுள்ளது.
மாளிகையின் வரலாற்று ஓவியங்கள், உடற்பயிற்சி மைய உபகரணங்கள், வாகனங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர திட்டம் வகுத்துள்ளார். இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் பேசியாதாவது:
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நமது நிலைமையை விவரிப்பதற்கு டில்லி வர விரும்புவதாக பிரதமர் மோடியிடம் நான் தெரிவித்தேன். நமக்கு இந்தியா செய்துவரும் உதவியை எப்போதும் பாராட்டுகிறேன். நமது மறுகட்டமைப்பு முயற்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தளபதி 67. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான அறிவிப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் நேற்றிலிருந்து வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு தனிவிமானம் மூலம் நேற்று ஸ்ரீநகர் சென்றது.
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இதில் படத்தின் நடிகர்கள், தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரவிக்குமார் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக, நடிகர் யோகி பாபுவை தூய்மைப் பணியாளராக நடிக்க வைத்து குறும்படம் ஒன்று தயாரிக்கப்படுகிறது.
இதில், தூய்மைப் பணியாளர் உடையணிந்த யோகி பாபு, வீடு, வீடாக சென்று குப்பைகளை பெற்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
கோமாளி திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இயக்கிய திரைப்படம் லவ் டுடே. இந்த படம் கடந்த நான்காம் தேதி வெளியானது.
இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் காரணமாக முதல் நாளிலிருந்து லவ் டுடே திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. இதற்கு பலனாக தற்போது தமிழகத்தில் மட்டும் இதுவரை 42 கோடியே 50 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளது.
இந்த திரைப்படம் ஆறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததால் அதிகப்படியான வசூலை ஈட்டி வருகிறது. 42 கோடியே 50 லட்சம் ரூபாய் மொத்த வசூலை இதுவரை ஈட்டி உள்ள நிலையில், அதில் 20 கோடி ரூபாய் ஷேர் தொகையாக தயாரிப்பாளருக்கு கிடைக்கும் என திரைத்துறையினர் கூறுகின்றனர்.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர்
இந்த சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ3.924 கோடி மதிப்புடைய கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு பெரியபாளையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பத்து நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ₹300 கட்டணத்தில் பரமபத வாசல் வழியாக தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி பண்டிகை வைஷ்ணவ பக்தர்களுக்கு சிறப்பு வாய்ந்த பண்டிகையாகும். மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா பெருமாள் கோவில்களில் நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா பகல்பத்து உற்சவம் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
குருபூஜையன்று தருமபுரம் ஆதீனத்தைப் பல்லக்கில் பக்தர்கள் தூக்கிச் செல்வார்கள்.
ஆதீனங்கள் பல்லக்கில் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமென்பதால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். மடத்துப் பிரச்சினையை மத பிரச்சனையாக ஆக்கியது யார்?
அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆன்மீகவாதி பேசக்கூடாதா? என, மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
சென்னை
சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ.1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.223 அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் ரூ.2,268க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டாடா தயாரிப்பை ஓரம் கட்டும் வகையில், விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி (MG). இது இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஆகும். சீனாவை சேர்ந்த செயிக் மோட்டார் (SAIC Motor) குழுமத்தின் ஒரு அங்கமாக எம்ஜி இயங்கி வருகிறது.
இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் (MG Hector), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus), எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster), எம்ஜி அஸ்டர் (MG Astor) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகிய கார்களை எம்ஜி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், எம்ஜி இஸட்எஸ் இவி காரானது, எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.
இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் இதன் விலை...
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால், நகை விற்பனை அதிகரிக்கும். எனவே, ஜூவல்லரி சார்ந்த பங்குகளான டைட்டன் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் நல்ல ஏற்றம் காண்கின்றன.
டைட்டன் பங்கு கடந்த ஜூலையில் இருந்து 44% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. மறுபுறம் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கு விலையானது மே 22ல் இருந்து கிட்டதட்ட 78% ஏற்றம் கண்டுள்ளது.
காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும்.
மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசினார் என்று குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கில், விசாரணை என்ற பெயரில் போலி நாடகம் நடத்தி, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதியைக் குழிதோண்டிப் புதைத்த செயலாகும்.
இதைக் காரணம் காட்டி, 24 மணி நேரத்திற்குள், ராகுல்காந்தி அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை நீக்கிவிட்டதாக மக்களவையில் மிருகத்தனமாக பெரும்பான்மை கொண்டிருக்கின்ற ஆணவத்தில் பா.ஜ.க. இந்த அக்கிரமச் செயலைச் செய்திருக்கிறது.
ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய நாசிசத்தைப் போல, இத்தாலியில் முசோலினி நடத்திய பாசிசத்தைப் போல, உகண்டாவில் இடிஅமீன் நடத்திய கொடுங்கோல் ஆட்சியைப் போல, நரேந்திர மோடி அரசு செயல்படுகிறது. விநாசகால விபரீத புத்தி என்று கூறுவதற்கு ஏற்ப இந்தத் தகுதி நீக்கத்தை...
நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது.
இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சிட்னி
தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல் அளித்துள்ளது. தங்களையும் தாக்க முகமது முயற்சித்ததால் அவரை துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவா
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 67லட்சத்து 99ஆயிரத்து 892 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 67கோடியே 99லட்சத்து 27ஆயிரத்து 382 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 65கோடியே 27லட்சத்து 79ஆயிரத்து 872 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40ஆயிரத்து 535 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துருக்கி நிலநடுக்கத்தை சரியாக கணித்த ஆய்வாளர் பிரான்க் ஹூகர்பீட்ஸ் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்க் ஹூகர்பீட்ஸ் இந்தியா பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துருக்கி, சிரியா எல்லையில் கடந்த 6 ந்தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.
மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
துருக்கி - சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில், இந்த...
உலக இளையோர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
19 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெண்கல பதக்கம் வென்றது. இந்திய வீராங்கணைகள் சஹானா, யஷ்வினி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.
டாக்கா
இந்தியா, வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து187 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் தவறவிட்ட கேட்ச் இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்துள்ளது.
வங்காளதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி வீரராக களமிறங்கிய ரஹ்மானுடன் ஜோடி சேர்ந்த மெஹிடி ஹசன் மிர்சா அதிரடியாக ஆடினார். அவர் ரன்களை வேகமாக அடிக்க இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு நழுவிக்கொண்டே இருந்தது.
ஷர்துல் தாகூர் வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ஹசன் மிர்சா விளாசினார். அது கேட்ச் நோக்கிச் சென்றது. அந்த பந்தை கேட்ச்...
புனே
12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.
இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெய்ப்பூர் அணி 32-22 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணி தரப்பில் அபாரமாக விளையாடிய அர்ஜுன் தேஷ்வால் 1 போனஸ் புள்ளி உட்பட 13 புள்ளிகளை குவித்து அசத்தினார்.
ரிசார்ட்டுகளில் சட்டவிரோதமாக செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டிருந்தால் குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்
அருவிகளில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என கேள்வி
வணிக நோக்கில் செயல்பட்ட ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவு
குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு துணைபோன அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் ஆணை
அரசால் அமைக்கப்பட்ட குழு 3 மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவையில் பொங்கல் பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
மேலும் நெல்லை, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் செய்யப்படும் பானைகளும் கோவைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. உலோக பாத்திரத்திரங்களுக்கு பதிலாக மண்பானையில் பொங்கல் வைக்க வேண்டும் என்பதே மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
சென்னை தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன்படி 2 வாரங்களில் மொத்தம் 450 தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். அவற்றில் 325 நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1639 ஆகஸ்ட் 22ம் நாள் மதராசப் பட்டினத்தை ஈஸ்ட் இந்தியா கம்பெனி சென்னப்ப நாயக்கன் என்பவரிடமிருந்து வாங்கிய நாள். சென்னை என அழைப்பதை விட இதனை மதராஸ் அல்லது மதராசபட்டினம் என்று அழைப்பதே பொருத்தம்.
பழமைவாய்ந்த நகரமான சென்னைக்கு வயது 655 என்கின்றனர்.
இந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதியுடன் சென்னைக்கு வயது 655 ஆகிறது.
பென்னேஸ்வர மடம் கிராமம் பெண்ணையாற்றங்கரையில் உள்ள பெரிய பாறையின் சரிவில் விஜயநகரப் பேரரசின் மன்னன் கம்பண உடையர், தம் ஆட்சியாண்டு சகம் 1291 ஆம் ஆண்டுப் பிலவங்க வருஷம் பூர்வபட்சம் ரோகிணி நட்சத்திரத்திற்கு நிகரான வரலாற்று ஆண்டு 1367 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதியன்று பொறித்த கல்வெட்டில் மாதரசன் பட்டணம் (‘Maadharasan Pattanam’) (சென்னை) குறித்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 31 வரிகளில் அமைந்த இக்கல்வெட்டுத் தமிழ் மொழியில் தமிழ் வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு விஜயநகரப்...
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சர்க்கரை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
ஆனால் காபி குடிக்கும் போது இனிப்பு தேவையெனில், அவர்களுக்கு கருப்பட்டி சிறந்த தீர்வாக இருக்கிறது.
பனை மரத்திலிருந்து உருவாக்கப்படும் கருப்பட்டி உணவு வகைகளில் இன்றியாமையாததாகும்.
இதில் உள்ள சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது.
தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது பனை. ஆனால், பனை தொடர்பான மக்களின் வழக்காறு என்பது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருந்துவந்திருக் கிறது. ‘பனை மரத்துல பாதி வளர்ந்திருக்கான், ஆனால் ஒண்ணுமே தெரியலை’, ‘பனை மரத்துக்குக் கீழ நின்னு பாலைக் குடிச்சாலும், ஊரு தப்பாத்தான் பேசும்’ என்று பனை மற்றும் பனை சார்ந்த விஷயங்கள் ஒரு நபரை அல்லது ஒரு விஷயத்தை இழிவுசெய்யவே பயன்பட்டு வருகிறது.