Sunday, May 18, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்கோவையில் தீபாவளி பட்டாசு வெடித்தபோது 11 இடங்களில் தீ விபத்து- 10 பேர் படுகாயம்

கோவையில் தீபாவளி பட்டாசு வெடித்தபோது 11 இடங்களில் தீ விபத்து- 10 பேர் படுகாயம்

கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது தீபாவளியை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் இரவு முதலே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாட தொடங்கினர்.

தமிழக அரசின் சார்பில் பட்டாசுகள் வெடிக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து, சாமி கும்பிட்டு பலகாரங்களை ஒருவருக்கொருவர் கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அதன்பிறகு அவர்கள் பட்டாசுகளுடன் தெருக்களுக்கு வந்திருந்து வெடிகளை வெடித்து மகிழ்ச்சி அடைந்தனர். தீபாவளி வெடிவிபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்று 11 இடங்களில் ராக்கெட் வெடிகளால் தீவிபத்துக்கள் ஏற்பட்டது தெரியவந்து உள்ளது. அதாவது கோவை மாநகரில் ஒலம்பஸ் பெருமாள்கோவில் வீடு, மேட்டுப்பாளையத்தில் 2 வீடுகள், தொண்டாமுத்தூர், அன்னூர், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் ராக்கெட் வெடிகள் விழுந்து குடிசை வீடுகள் தீப்பிடித்தன. ஆனாலும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் தீபாவளி வெடி வெடித்ததில் பல்வேறு இடங்களில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

- Advertisment -

Most Popular

Recent Comments