உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் பேருந்தில் சென்ற 9 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல் “பொதுமக்களை கொல்ல திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்” என்று உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா இதுகுறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.
சுமியில் ராணுவ நிலைகளை தாக்கியதாக ரஷ்ய அரசு ஊடகம் கூறுகிறது.