Monday, June 2, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை.. எடப்பாடியிடம் உள்ள காவிக்கொடியும் இல்லை - மு.க.ஸ்டாலின்

என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை.. எடப்பாடியிடம் உள்ள காவிக்கொடியும் இல்லை – மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனைக்கு பின், கடந்த வாரம் டாஸ்மாக் ஊழியர்கள் வீடுகள், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ் ஆகியோரின் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இதனால் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விசாரணை சூடுபிடித்த நிலையில், அதிமுக தரப்பில் யார் அந்த தம்பி என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள அறிவிப்பு வெளியாகியது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில், வெள்ளைக்கொடிக்கு வேலை வந்துவிட்டதோ என்று கிண்டல் செய்தார்.

இந்த நிலையில் டெல்லி இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது மு.க.ஸ்டாலின் தரப்பில் 4 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. குறிப்பாக கல்வி நிதி மற்றும் நிதிப் பகிர்வு விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசியது அனைவரின் கவனத்தையும் பெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ திட்டம், கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வலியுறுத்தினேன். அதேபோல் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன்.

- Advertisment -

Most Popular

Recent Comments