Wednesday, November 12, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுநவ. 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

நவ. 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை

தமிழகத்தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

வட தமிழகம் அதையொட் டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குசுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் வரும்13-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 14, 15-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 12, 13-ல் தஞ்சை,புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments