டெல்லி
இந்தியாவில் மேலும் 12,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,04,79,179- ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 167 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,51,327-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,01,11,294- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,16,558- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.