Tuesday, May 30, 2023
Home உலகம் காபூல் குண்டுவெடிப்பில் 90 பேர் உயிரிழப்பு, தேடி வந்து வேட்டையாடுவோம் - அமெரிக்க அதிபர் ஜோபைடன்...

காபூல் குண்டுவெடிப்பில் 90 பேர் உயிரிழப்பு, தேடி வந்து வேட்டையாடுவோம் – அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை.

காபூல்

காபூலில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 90 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு அதிரடியாக இறங்கிய அமெரிக்க படை அங்குள்ள அமெரிக்கர்களை மீட்டு வருகிறது. அதேபோல் இந்தியர்களும் இதுவரை 300ற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். அத்துடன் அந்நாட்டில் இருந்து வெளியேற காபூலில் உள்ள விமான நிலையத்தில் ஆப்கானியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த சூழலில் காபூலில் உள்ள விமான நிலையம் அருகே ஒரு வெடிகுண்டும், அருகில் உள்ள ஹோட்டலில் மற்றொரு குண்டும் வெடித்தது. இந்நிலையில் காபூல் இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது, இதில் குழந்தைகள் உள்பட 13 அமெரிக்க படையினர் உயிரிழந்துள்ளனர். காபூல் குண்டுவெடிப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ” காபூல் குண்டுவெடிப்பை மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்; அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஆப்கானிஸ்தானின் காபூலில் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில் வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி மாலை வரை அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments