Monday, March 20, 2023
Home தமிழகம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெஞ்சை பதறவைக்கும் கொடூரமான பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் அளித்த புகாரின் கீழ் சபரிராஜன் திருநாவுக்கரசு வசந்தகுமார் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களின் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்தநிலையில் ஹெரான்பால், அருளானந்தம் ,பாபு ஆகிய மூன்று பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை சிபிஐ இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தினந்தோறும் விசாரித்து 6 மாத காலகட்டத்தில் வழக்கை முடிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments