Tuesday, October 3, 2023
Home தமிழகம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெஞ்சை பதறவைக்கும் கொடூரமான பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் அளித்த புகாரின் கீழ் சபரிராஜன் திருநாவுக்கரசு வசந்தகுமார் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களின் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்தநிலையில் ஹெரான்பால், அருளானந்தம் ,பாபு ஆகிய மூன்று பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை சிபிஐ இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தினந்தோறும் விசாரித்து 6 மாத காலகட்டத்தில் வழக்கை முடிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments