தனது பெயரை பயன்படுத்தி தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் கட்சி தொடங்குவதாக கூறி தனது தந்தையின் மீதும்,தாய் சோபா மீதும் விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில் நடந்த பொதுக்குழுவில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் ஏற்படுத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.