Tuesday, October 3, 2023
Home தமிழகம் வாக்காளர்களுக்கு தருவதற்காக அதிமுக வினர் பதுக்கி வைத்திருந்த 38 செல்போன்கள் பறிமுதல்

வாக்காளர்களுக்கு தருவதற்காக அதிமுக வினர் பதுக்கி வைத்திருந்த 38 செல்போன்கள் பறிமுதல்

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்கு 38வது வார்டில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுகவினர் மறைத்து வைத்திருந்த 38 செல்போன்களை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது. போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கரூர் மாநகராட்சி 38வது வார்டு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, கரூர் 38வது வார்டு பகுதியில் மாரியாயி என்ற பெண்மணி, தனது பைக்குள் 11 கீபேட் செல்போன்களை வைத்திருந்தார். அந்த பையில் அதிமுக சார்பில் 38வது வார்டில் போட்டியிடும் சரவணன் என்பவரது பெயர் பொறிக்கப்பட்ட டோக்கன்களும் இருந்தன. சரவணன், முன்னாள் அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, போலீசார், அந்த பெண்மணி மீது சந்தேகமடைந்து, அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர். அப்போது, அந்த செல்போன்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுக வினர் வைத்திருந்தது என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அந்த பெண் அளித்த தகவலின்படி, போலீசார் அதே வார்டில் ஒரு வீட்டில் சோதனையிட்டனர். அப்போது, அந்த வீட்டில் 27 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து 38 செல்போன்களையும், அதிமுக வேட்பாளர் சரவணனின் பெயர் பொறிக்கப்பட்ட ஏராளமான டோக்கன்களையும் போலீசார் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments