Friday, March 24, 2023
Home தமிழகம் சிங்கி குளத்தில் சாலையைக் கடந்து சென்ற பிரம்மாண்ட மலைப் பாம்பு - பொது மக்கள் பீதி

சிங்கி குளத்தில் சாலையைக் கடந்து சென்ற பிரம்மாண்ட மலைப் பாம்பு – பொது மக்கள் பீதி

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் பச்சையாற்றில் சுமார் 25அடி நீள மலைப்பாம்பு உலவி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவ மழை வெள்ளத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து அடித்து வரப்பட்டு இருக்கலாம் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். ஆற்றங்கரையோரம் குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி அந்த பாம்பு வசித்து வருவதால் அப்பகுதியினர் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு பாணாங்குளம் செல்லும் சாலையில் அந்த மலைப்பாம்பு சாவகாசமாக கடந்து செல்வதை அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். பச்சை ஆற்றில் இருக்கும் புதரில் மறைந்திருக்கும் மலைப் பாம்பால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து உள்ளதால் வனத்துறையினர் அதனைப் பிடிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments