Tuesday, October 3, 2023
Home இந்தியா காஷ்மீரில் பண்டிட் சமூகத்தை சேர்ந்த ஆசிரியை தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

காஷ்மீரில் பண்டிட் சமூகத்தை சேர்ந்த ஆசிரியை தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கோபால்போரா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர்.

இதில் சம்பாவைச் சேர்ந்த 36 வயதான ரஜினி பாலா என்னும் ஆசிரியை படுகாயம் அடைந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் பட்காம் மாவட்டத்தில் அரசு ஊழியரும் காஷ்மீர் பண்டிட்டுமான ராகுல் பட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments