Thursday, May 25, 2023
Home வர்த்தகம் டாடா தயாரிப்பை ஓரங்கட்ட வரும் புதிய எம்ஜி எலெக்ட்ரிக் கார்

டாடா தயாரிப்பை ஓரங்கட்ட வரும் புதிய எம்ஜி எலெக்ட்ரிக் கார்

டாடா தயாரிப்பை ஓரம் கட்டும் வகையில், விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி (MG). இது இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஆகும். சீனாவை சேர்ந்த செயிக் மோட்டார் (SAIC Motor) குழுமத்தின் ஒரு அங்கமாக எம்ஜி இயங்கி வருகிறது.

இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் (MG Hector), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus), எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster), எம்ஜி அஸ்டர் (MG Astor) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகிய கார்களை எம்ஜி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், எம்ஜி இஸட்எஸ் இவி காரானது, எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.

இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் இதன் விலை மிகவும் அதிகம். தற்போதைய நிலையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 22.58 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 26.50 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இவ்வளவு விலை கொடுத்து அனைவராலும் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க முடியாது. எனவே எம்ஜி நிறுவனம் மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், எம்ஜி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை வரும் ஜனவரி 5ம் தேதி இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன. இது இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள இரண்டாவது எலெக்ட்ரிக் காராக இருக்கும்.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments