Thursday, December 7, 2023
Home வர்த்தகம் டாடா தயாரிப்பை ஓரங்கட்ட வரும் புதிய எம்ஜி எலெக்ட்ரிக் கார்

டாடா தயாரிப்பை ஓரங்கட்ட வரும் புதிய எம்ஜி எலெக்ட்ரிக் கார்

டாடா தயாரிப்பை ஓரம் கட்டும் வகையில், விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி (MG). இது இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஆகும். சீனாவை சேர்ந்த செயிக் மோட்டார் (SAIC Motor) குழுமத்தின் ஒரு அங்கமாக எம்ஜி இயங்கி வருகிறது.

இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் (MG Hector), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus), எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster), எம்ஜி அஸ்டர் (MG Astor) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகிய கார்களை எம்ஜி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், எம்ஜி இஸட்எஸ் இவி காரானது, எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.

இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் இதன் விலை மிகவும் அதிகம். தற்போதைய நிலையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 22.58 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 26.50 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இவ்வளவு விலை கொடுத்து அனைவராலும் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க முடியாது. எனவே எம்ஜி நிறுவனம் மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், எம்ஜி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை வரும் ஜனவரி 5ம் தேதி இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன. இது இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள இரண்டாவது எலெக்ட்ரிக் காராக இருக்கும்.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments