Friday, May 26, 2023
Home உலகம் ஆஸ்கார் விருது வென்ற ஈரான் நடிகை தாரனே அலிதூஸ்டி கைது

ஆஸ்கார் விருது வென்ற ஈரான் நடிகை தாரனே அலிதூஸ்டி கைது

ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை அரசு இரும்பு காரம் கொண்டு ஒடுக்கியது. இதில் 500-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இதனிடையே அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 18 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் போராட்டத்தின் போது பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கு சமீபத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஈரானை சேர்ந்த புகழ்பெற்ற நடிகை தாரனே அலிதூஸ்டி போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்தும் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் அவர் ஈரானின் மரண தண்டனைக்கு எதிராக பேசும்படி சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் போராட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியதாக குற்றம் சாட்டி நடிகை தாரனே அலிதூஸ்டியை ஈரான் போலீசார் நேற்று கைது செய்தனர். 38 வயதான தாரனே அலிதூஸ்டி ஈரானின் வெற்றிகரமான நடிகைகளில் ஒருவர் என்பதும், இவர் நடித்த ‘தி சேல்ஸ்மேன்’ திரைப்படம் கடந்த 2016-ம் ஆண்டு சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற பின்னர் உலகளவில் பிரபலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments