Sunday, June 4, 2023
Home தமிழகம் ராகுல்காந்தி தகுதி நீக்கம் - கன்னியாகுமரி மாவட்டத்தில் தீ பந்தம் ஏந்தி பேரணி

ராகுல்காந்தி தகுதி நீக்கம் – கன்னியாகுமரி மாவட்டத்தில் தீ பந்தம் ஏந்தி பேரணி

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யபட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையான முளகுமூடு பகுதியில் இளைஞர் காங்கிரசார் தீ பந்தம் ஏந்தி பேரணி, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உட்பட ஐநூறு க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வயநாடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான ராகுல்காந்தியை மாநிலங்களவையில் தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் காங்கிரசார் சார்பில் முளகுமூடு பகுதியில் இருந்து அழகியமண்டபம் வரையிலான சுமார் ஒரு கி.மீ தூரம் இளைஞர் காங்கிரசார் தீ பந்தம் ஏந்தி பேரணியாக வந்தனர்.

இந்த போராட்டத்திற்கு முன்னதாக முளகுமூடு சந்திப்பில் உள்ள ராஜிவ்காந்தி சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேரணியை துவங்கி வைத்தார். இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு பங்கேற்றனர்.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments