இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மும்பையில் மீனவர்களுடன் இந்திய கடற்படை ஆலோசனை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து, அரபிக்கடல் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் இந்திய கடற்படை கொண்டுவந்தது.
மீனவர்கள் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய கடற்படை அறிவுறுத்தியுள்ளது. துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க தயார்நிலையில் இந்திய கடற்படை உள்ளது.