டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் நிலவும் படுக்கைத் தட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.
கிட்டதட்ட 5 ஆயிரம் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் நிலையில் அதில் ஆயிரம் படுக்கைகளையாவது மத்திய அரசு உடனடியாக வழங்க அவர் கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசின் உதவியை கெஜ்ரிவால் நாட உள்ளதாக கூறப்படுகிறது.