லஷ்மி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு தற்காலிகமானது என லஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாக அதிகாரி மனோகரன் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய தேவை இருப்பின் உரிய ஆதாரத்துடன் வாடிக்கையாளர்கள் ரூ.5 லட்சம் வரை எடுக்கலாம். லஷ்மி விலாஸ் வங்கி விரைவில் பழைய நிலைக்கு திரும்பும் என ரிசர்வ் வங்கி சிறப்பு அதிகாரி மனோகரன் தெரிவித்துள்ளார். வடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களின் ஒரு ரூபாய் கூட நஷ்டம் அடையாது என அவர் தெரிவித்துள்ளார்.