டெல்லி
டெல்லியில் போராட்டம் நடத்தும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்காக உணவு தயாரிப்பில் பெண்கள் பல குழுக்களாக ஈடுபட்டுள்ளனர்.
உணவு பிரச்சினையால் போராட்டம் எந்த அளவிலும் வலுவிழந்து விடக்கூடாது என்பதால் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள விவசாயிகளின் குடும்பத்து பெண்கள் தங்கள் ஊர்களிலிருந்து எடுத்து வந்த சமையல் பாத்திரங்களை வைத்து ரோட்டில் அடுப்புமூட்டி சமைக்கின்றனர்.
இதை பார்க்கும்பொழுது, இந்தப் போராட்டம் மிகுந்த முன்னேற்பாட்டுடன் நடப்பதாகவே தோன்றுகிறது. இது மத்திய அரசுக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது.