சென்னை
கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் உடலை வழங்க லஞ்சம் கேட்ட சுகாதார ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவால் இறந்த சாந்தி (57) என்ற பெண்ணின் உடலை வழங்க ரூ.19 ஆயிரம் லஞ்சம் கேட்ட புகாரில் சுகாதார ஆய்வாளர்கள் சுந்தரசபெருமாள், தசரதன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.