Wednesday, March 29, 2023
Home பொது பாஸ்ட்புட் துரித தயாரிப்பு உணவுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து - எச்சரிக்கும் வல்லுநர்கள்

பாஸ்ட்புட் துரித தயாரிப்பு உணவுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து – எச்சரிக்கும் வல்லுநர்கள்

பாஸ்ட்புட் எனப்படும் ரோட்டோர கடைகளிலும் உணவகங்களிலும் விற்கப்படும், துரித உணவுகள் அதனை உண்பவர்களின் உடலுக்கு எத்தனை கோளாறுகளையும் நோய்களையும் உருவாக்குகிறது என்பது குறித்து விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மக்களை சென்றடைந்து வருகிறது. என்றாலும் அவற்றின் ருசிக்கு அடிமையாகிவிட்ட நம் மக்கள், கேடு என தெரிந்தும் தேடி சென்று காசு கொடுத்து நோயை வாங்கி வருகிறார்கள்.

பெரியவர்களுக்கு இப்படியொரு பாதிப்பு என்றால், அதனை அடிக்கடி உண்ணும் குழந்தைகளுக்கும் ஞாபக சக்தி குறைவு ஏற்படும் என்கிற ஆய்வு முடிவுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த துரித உணவுகளே இன்றைய கால குழந்தைகளில் பெரும்பாலானோர் படிப்பில் கோட்டை விடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

ஏன், 400 மொழிகளில் பேசி அசத்தும், பல சாதனைகளை புரிந்த உலக புகழ் பெற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த மஹ்மூத் அக்ரம் என்கிற 13 வயது சிறுவன் கூட, தனது ஞாபக சக்தியை மேம்படுத்த, பாஸ்ட் புட், சர்க்கரை, மைதா போன்ற உணவு பொருட்களை தவிர்ப்பதாகவும், அவற்றிற்கு பதிலாக கேழ்வரகு, தினை, குதிரைவாலி, சோளம் போன்றவற்றையே உண்பதாகவும் தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments