Friday, September 29, 2023
Home பொது பாஸ்ட்புட் துரித தயாரிப்பு உணவுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து - எச்சரிக்கும் வல்லுநர்கள்

பாஸ்ட்புட் துரித தயாரிப்பு உணவுகளால் குழந்தைகளுக்கு ஆபத்து – எச்சரிக்கும் வல்லுநர்கள்

பாஸ்ட்புட் எனப்படும் ரோட்டோர கடைகளிலும் உணவகங்களிலும் விற்கப்படும், துரித உணவுகள் அதனை உண்பவர்களின் உடலுக்கு எத்தனை கோளாறுகளையும் நோய்களையும் உருவாக்குகிறது என்பது குறித்து விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மக்களை சென்றடைந்து வருகிறது. என்றாலும் அவற்றின் ருசிக்கு அடிமையாகிவிட்ட நம் மக்கள், கேடு என தெரிந்தும் தேடி சென்று காசு கொடுத்து நோயை வாங்கி வருகிறார்கள்.

பெரியவர்களுக்கு இப்படியொரு பாதிப்பு என்றால், அதனை அடிக்கடி உண்ணும் குழந்தைகளுக்கும் ஞாபக சக்தி குறைவு ஏற்படும் என்கிற ஆய்வு முடிவுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த துரித உணவுகளே இன்றைய கால குழந்தைகளில் பெரும்பாலானோர் படிப்பில் கோட்டை விடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

ஏன், 400 மொழிகளில் பேசி அசத்தும், பல சாதனைகளை புரிந்த உலக புகழ் பெற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த மஹ்மூத் அக்ரம் என்கிற 13 வயது சிறுவன் கூட, தனது ஞாபக சக்தியை மேம்படுத்த, பாஸ்ட் புட், சர்க்கரை, மைதா போன்ற உணவு பொருட்களை தவிர்ப்பதாகவும், அவற்றிற்கு பதிலாக கேழ்வரகு, தினை, குதிரைவாலி, சோளம் போன்றவற்றையே உண்பதாகவும் தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments