Saturday, March 25, 2023
Home பொது பல நாளாக உணவு இல்லை - கம்பீர சிங்கங்களின் தோற்றம்

பல நாளாக உணவு இல்லை – கம்பீர சிங்கங்களின் தோற்றம்

கார்டூமி

சூடானின் தலைநகர் கார்டூமில் உள்ள அல்-குரேஷி என்ற தேசிய வனவிலங்கு பூங்காவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையில் எலும்பும் தோலுமாக இருக்கும் ஆப்பிரிக்க சிங்கங்களை காப்பாற்ற உதவ வேண்டும் என ஆன்லைனில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த புகைப்படங்களை பார்த்து கண் கலங்காதவர்களே இல்லை. அந்த அளவுக்கு சிங்கங்கள் மோசமாக காணப்படுகிறது. பல நாள் சாப்பிடாமல், உணவும் கிடைக்காமல் சிங்கங்கள் பார்க்கவே மோசமாக இருக்கின்றன. ஆனால் சூடான் அரசோ அங்குள்ள மக்களுக்கே உணவு அளிக்க வசதி இல்லை.

சிங்கங்கள் உணவு இல்லாமல் அவதிப்படும் புகைப்படங்களை பார்த்த பலர் இந்தச் சிங்கங்களுக்குப் பாதுகாப்பான நல்ல வசதியுடன் கூடிய வேறு இடம் தேவை என சமூகவலைதளத்தில் குரலெழுப்பி வருகின்றனர்.

#SudanAnimalRescue என்ற ஹாஸ்டேக் உலகம் முழுவதும் பரவி வருகிறது. சூடான் சிங்கங்களுக்கு மக்கள் நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனிடையே தற்போதைய நிலையில் சிங்கத்தை அந்த பூங்காவில் உள்ள ஊழியர்கள் தங்களால் முடிந்த உணவு கொடுத்து காப்பாற்ற முயன்று வருகிறார்கள்.

இது தொடர்பாக பூங்கா அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கூறியது:

கடந்த சில வாரங்களாக சிங்கங்களின் நிலை மோசமடைந்துள்ளதாகவும், சிலர் உடலில் மூன்றில் இரண்டு பங்கு எடையை இழந்ததாகவும் வேதனை தெரிவித்தனர்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments