Friday, September 29, 2023
Home வர்த்தகம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் சரிவு

மும்பை

இந்திய பங்குச்சந்தைகள் 2வது நாளாக மீண்டும் சரிவைச் சந்தித்தன. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 202 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. நிப்டி 61புள்ளிகள் சரிந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் நடப்பாண்டில் 2020 ஜனவரி மாதத்தில் 3.1 சதவீதமாக அதிகரிப்பு. தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது போன்ற காரணங்களால் இன்று வர்த்தகம் துவங்கும் பொழுதே சென்செக்ஸ் சரிவுடன் தொடங்கியது. இறுதியில் சென்செக்ஸ் 202.05 புள்ளிகள் சரிந்து 41,275.74 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 61.20 புள்ளிகள் சரிந்து  12,113.45 புள்ளிகளில் நிலைபெற்றது.

இன்டஸ்இன்ட் வங்கி 4.38 சதவீதம் சரிந்தது, பவர் கிரிட், எஸ்பிஐ, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தன. பாரதி ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகள் 4.69 சதவீதம் அதிகரித்தது.

இந்திய ரூபாயின் மதிப்பு (14-02-2020) காலை வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மாற்றின் போது 2 காசுகள் சரிந்து ரூ.71.33 காசுகளாக இருந்தது. இன்று மாலையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.37 காசுகளாக நிலைபெற்றது. நேற்று வர்த்தக இறுதியில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.31 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments