Friday, March 24, 2023
Home சினிமா சைக்கோ திரில்லர் கதையில் பிரபுதேவாவின் மிரட்டல் தோற்றம்

சைக்கோ திரில்லர் கதையில் பிரபுதேவாவின் மிரட்டல் தோற்றம்

பிரபுதேவா நடிப்பில் கடந்த வருடம் சார்லி சாப்ளின்-2, தேவி-2 படங்கள் வந்தன. கடந்த மாதம் இந்தியில் நடித்த ஸ்டீரீட் டான்சர் படமும் வெளியானது. போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ‘பொன்மாணிக்கவேல்’ படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்தியில் சல்மான்கானை வைத்து பிரபுதேவா இயக்கிய தபாங்-3 டிசம்பர் மாதம் வெளியானது. தற்போது மீண்டும் சல்மான்கான் நடிக்கும் ராதே படத்தை இயக்கி வருகிறார். காதலை தேடி நித்யா நந்தா என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவும் பிரபுதேவாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த படத்துக்கு பஹிரா என்று தலைப்பு வைத்துள்ளனர். சைக்கோ திரில்லர் கதையம்சத்தில் தயாராகிறது. படத்தில் பிரபுதேவா தோற்றத்தை  படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மொட்டை தலையில் மிரட்டலாக  இருக்கிறார். இந்த தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் அமைரா தஸ்தர் நாயகியாக நடிக்கிறார்.

படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் கூறியது:

தி ஜங்கிள் புக் காமிக்ஸ் கதையில் வரும் கருஞ்சிறுத்தையின் பெயர்தான் பஹிரா. அந்த கதையில் வரும் நாயகன் பாத்திரமான மோக்ளியை பாடுபட்டு காப்பாற்றும். அந்த குணாதிசயங்களோடு பிரபுதேவா நடிக்கிறார். படத்தில் பல திருப்பங்கள் இருக்கும். பிரபுதேவாவை இதுவரை பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில் காணலாம் என்றார்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments