Friday, September 29, 2023
Home சினிமா இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - கிரேன் சாய்ந்து விழுந்து 3 பேர் பலி...

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து – கிரேன் சாய்ந்து விழுந்து 3 பேர் பலி 9 பேர் படுகாயம்

சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் – 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை இரவு சண்டை காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது. இதற்கான செட் அமைக்கும் பணிகளில் சண்டைக் கலைஞர்கள், தொழில்நுட்ப பிரிவினர் ஈடுபட்டிருந்தனர்.

இதில் கிரேன்களில் ஏறி மின்விளக்குகளை பொருத்திக் கொண்டிருந்தனர். அப்போது கிரேனில் இணைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பி திடீரென அறுந்து சரிந்தது. இதில் கீழே நின்று கொண்டிருந்த உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த மது (வயது 29), சந்திரன் (வயது 60), உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தனர். அனைவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் இயக்குநர் ஷங்கருக்கும் கால்முறிவு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் இது தவறான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments