Saturday, March 25, 2023
Home சினிமா இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - கிரேன் சாய்ந்து விழுந்து 3 பேர் பலி...

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து – கிரேன் சாய்ந்து விழுந்து 3 பேர் பலி 9 பேர் படுகாயம்

சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் – 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை இரவு சண்டை காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது. இதற்கான செட் அமைக்கும் பணிகளில் சண்டைக் கலைஞர்கள், தொழில்நுட்ப பிரிவினர் ஈடுபட்டிருந்தனர்.

இதில் கிரேன்களில் ஏறி மின்விளக்குகளை பொருத்திக் கொண்டிருந்தனர். அப்போது கிரேனில் இணைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பி திடீரென அறுந்து சரிந்தது. இதில் கீழே நின்று கொண்டிருந்த உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த மது (வயது 29), சந்திரன் (வயது 60), உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தனர். அனைவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் இயக்குநர் ஷங்கருக்கும் கால்முறிவு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் இது தவறான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments