Wednesday, March 29, 2023
Home சினிமா மக்களை மகிழ்விக்கும் படங்கள் தயாரிப்பேன் - நடிகை குஷ்பு

மக்களை மகிழ்விக்கும் படங்கள் தயாரிப்பேன் – நடிகை குஷ்பு

சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் ஜோடியாக நடித்து ராணா இயக்கி உள்ள ‘நான் சிரித்தால்’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகை குஷ்பு, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா மற்றும் ஆதி, ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகை குஷ்பு பேசியதாவது:

அவ்னி மூவிஸ் பட தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்பது எனக்கும், கணவர் சுந்தர்.சிக்கும் இருந்த கனவு. எங்கள் இருவருக்கும் தெரிந்த விஷயம் சினிமாதான். சினிமாவே மூச்சு. சினிமாவை தவிர வேறு தொழில் தெரியாது. சினிமாவை மட்டுமே நேசிக்கிறோம். நாங்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே சினிமாவில்தான் இருக்கிறோம்.

எனவேதான் படங்கள் தயாரிக்க தொடங்கினோம். எல்லா படங்களும் நன்றாக ஓட வேண்டும். தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது. அவர்கள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஒரு பாடலுக்கு இசையமைக்க வந்த ஆதி இப்போது குடும்பத்தில் ஒருவராகிவிட்டார்.

தூக்கத்தில் எழுந்து பார்த்தால் கூட சுந்தர்.சி ஆதியுடன் பேசிக்கொண்டு இருப்பார். என்னுடைய சக்களத்தி என்றே ஆதியை சொல்லலாம். எங்களுக்கு கருத்து, கஷ்டங்கள் ஆகியவற்றை சொல்லும் படம் எடுக்க விருப்பம் இல்லை. அனைவரையும் மகிழ்விக்கும் பொழுதுபோக்கு படங்களை தொடர்ந்து தயாரிப்பதில் உறுதியோடு இருக்கிறோம். இவ்வாறு பேசினார்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments