Tuesday, May 30, 2023
Home சினிமா சுனாமி போல நடந்தது: இந்தியன் 2 விபத்து பற்றி கமல் உருக்கம் - ரூ.1 கோடி...

சுனாமி போல நடந்தது: இந்தியன் 2 விபத்து பற்றி கமல் உருக்கம் – ரூ.1 கோடி நிதி உதவி

சென்னை

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கின் போது நடைபெற்ற விபத்து காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன் 1 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் வேகமாக தயாராகி வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். இந்த நிலையில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து இன்று கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார். அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியது:

இது போன்ற விஷயங்கள் இனி நடக்க கூடாது. இதற்கு தேவையான விஷயங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். இந்த சினிமா துறை இதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். இது நாம் செய்ய வேண்டிய விஷயம். நாம் பல கோடி சம்பாதிக்கிறோம்.

100 கோடி, 200 கோடி என்று மார் தட்டிக்கொள்கிறோம். ஆனால் கடை நிலை ஊழியர் ஒருவருக்கு பணம் கொடுக்க முடியாமல், அவர்களை பாதுகாக்க முடியாமல் நாம் கஷ்டப்படுகிறோம். நாம் இதற்கு வெட்கப்பட வேண்டும். ஒரு தனிப்பட்ட நபராக எனக்கு இது அவமானம். என்னால் முடிந்தது நிதி உதவி மட்டும்தான்.

இதில் இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவருக்கு நான் நிதி உதவி அளிக்கிறேன். இதில், காயம் அடைந்தோர், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கிறேன். இவர்கள் மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மிகப்பெரிய உறவை இழந்து இருக்கிறார்கள். நானும் விபத்தை சந்தித்து இருக்கிறேன். விபத்தில் இருந்து வெளியே வருவது மிகவும் சிரமம்.

கிருஷ்ணா என்னிடம் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இரண்டு நாட்கள் முன்புதான் வந்து அவர் என்னிடம் இந்தியன் 2 குழுவில் இணைந்தது குறித்து பேசினார். ஆனால் இப்போது அவர் நம்முடன் இல்லை. அதேபோல் மதுவும், சந்திரனும் எனக்கும் மிகவும் நெருக்கம். இவர்களுக்காக நான் அறிவித்த தொகை, கொஞ்சம் கூட போதாது.

ஆனால் இது அவர்களின் குடும்பத்திற்கு கொஞ்சம் உதவும். இது சிகிச்சையாக இருக்க முடியாது. இப்படி கஷ்டப்பட்டு பணியாற்றும் மக்களுக்கு இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு வேண்டும். இது நம்முடைய கடமை என்று கமல்ஹாசன்,. இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்தை எனது குடும்பத்தில் நடந்த விபத்தாக பார்க்கிறேன் என்றார்.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments