Friday, September 29, 2023
Home உலகம் ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாதவர்களை தரம் பிரிப்பதில் சிக்கல் - ஜப்பான் அரசு...

ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாதவர்களை தரம் பிரிப்பதில் சிக்கல் – ஜப்பான் அரசு கவலை

டோக்கியோ  

ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாதவர்களை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. யோகஹாமா துறைமுகத்தில் பிப்ரவரி 3ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் என்ற பிரமாண்ட கப்பலில் கொரோனா வைரசு தொடர்ந்து பரவி வருகிறது. மொத்தம் உள்ள 3,700 பேரில், வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது.

ஏற்கனவே 2 பேர் உயிழந்துள்ளதால் தங்கள் நாட்டு பயணிகளை அந்தந்த நாடுகள் பத்திரமாக அழைத்து சென்று வருகின்றனர். ஆனால் நோய் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதை பிரித்து அறிய முடியவில்லை என்று ஜப்பான் அரசு கவலை தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் இந்தியர்கள் மொத்தம் 138 பேர் உள்ளனர். அவர்களில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களின் உடல்நிலை தேறி வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்து இருக்கிறது. 19ம் தேதிக்குள் கப்பலில் இருந்து அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்பது இலக்காகும். ஆனால் அந்த பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஜப்பான் நகரில் 80க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments