Wednesday, March 29, 2023
Home உலகம் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவி - அமெரிக்க உளவுத்துறை

டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவி – அமெரிக்க உளவுத்துறை

வாஷிங்டன்

2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலிலும் ரஷ்யாவின் தலையீடு உள்ளது என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குழுவிடம் அமெரிக்க புலனாய்வுப் பிரிவு தலைவர் ஜோசப் மாகுயிர்  தகவல் தந்தார் எனக் கூறப்படுகிறது. அவர் 20 ஆம் தேதி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஜெர்மன் நாட்டு அமெரிக்க தூதராக உள்ள கிரேனெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது போல 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலிலும் ரஷ்யா விரிவான பிரச்சாரத்தில் தலையிட்டு நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறது என நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் செய்தி வெளியிட்டன. இச்செய்திகளை அமெரிக்க அதிபரிடம் கடுமையாக மறுத்தார். வரவிருக்கும் அதிபர் தேர்தலில் தனக்கு எதிரான தகவல்களை வேண்டுமென்றே இந்த 2 பத்திரிகைகளும் வெளியிடுவதாக அவர் குற்றம் சாட்டினார். டிரம்ப்பின் புகார் டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரம் செய்யப்பட்டது.

இந்தப் பின்னணியில் மக்கள் பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு கமிட்டி அமெரிக்க புலனாய்வு பிரிவு தலைமை அதிகாரியை அழைத்து நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்திகள் குறித்து விளக்கம் தரும்படி கேட்டது அதைத்தொடர்ந்து அமெரிக்க புலனாய்வு பிரிவு தலைமை அதிகாரி ஜோசப் மாகுயிர் பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுக் கமிட்டியில் கடந்த 13 ஆம் தேதி சாட்சியமளித்தார்.

 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குறுக்கிட்டது போல இப்பொழுதும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ரஷ்யா  குறுக்கிட்டு வருகிறது என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கடும் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், புலனாய்வுக் குழுவின் தலைமை அதிகாரியாக உள்ள ஜோசப் மாகுயிரை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டார். அவருக்குப் பதிலாக ஜெர்மன் நாட்டில் அமெரிக்க தூதராக உள்ள கிரெனெல் என்பவரை அமெரிக்க புலனாய்வு பிரிவு தலைமை அதிகாரியாக நியமித்து 20 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments