Tuesday, May 30, 2023
Home உலகம் இந்தியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் செய்ய உள்ளோம் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் செய்ய உள்ளோம் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அவருடன் அவருடைய மனைவி மெலனியா மகள் இவாங்கா உள்ளிட்டோரும் வந்திருந்தனர். பயணம் முடித்து நாடு திரும்பிய அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி மிகச் சிறந்த மனிதர் மிகச் சிறந்த தலைவர். இந்தியா மிகவும் சிறந்த நாடு. இந்தியர்கள் மிகச் சிறந்த வரவேற்பை அளித்தனர். அதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் பல விஷயங்கள் இந்தப் பயணத்தில் நடந்தன.

இந்தியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் செய்ய உள்ளோம். அவர்கள் கோடிக் கணக்கில் செலவிட உள்ளனர். ராணுவ ஒப்பந்தம் உட்பட பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு இந்தப் பயணம் உதவியுள்ளது. அமெரிக்கா சர்வதேச வளர்ச்சி நிதி வாரியம் அமைப்பின் கிளை இந்தியாவில் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments