Friday, September 29, 2023
Home உலகம் மெக்கா பயணிகளின் விசா தற்காலிக ரத்து - கொரோனா பரவுவதால் சவுதி அரசு நடவடிக்கை

மெக்கா பயணிகளின் விசா தற்காலிக ரத்து – கொரோனா பரவுவதால் சவுதி அரசு நடவடிக்கை

மெக்காவிற்கு புனிதப்பயணம் செல்லும் யாத்திரிகர்களுக்கான விசாக்களை சவுதி அரேபிய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால், சென்னை மற்றும் மதுரையிலிருந்து புறப்பட இருந்தவர்களின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெக்காவிற்கு புனிதப்பயணம் செல்லும் யாத்ரீகர்களுக்கான விசாக்களை சவுதி அரேபிய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து விமான நிலையங்களுக்கும் அவசர உத்தரவு ஒன்று பிறப்பித்தது. இதன் அடிப்படையில் மதுரை விமான நிலையத்தில் சவுதி அரேபியா செல்ல விமானத்தில் தயாராக இருந்த 66 பயணிகள், வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதே போன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியா செல்ல இருந்த 170 பயணிகள், விமானத்தில் ஏறியிருந்த நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டு வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments