Saturday, March 25, 2023
Home உலகம் மெக்கா பயணிகளின் விசா தற்காலிக ரத்து - கொரோனா பரவுவதால் சவுதி அரசு நடவடிக்கை

மெக்கா பயணிகளின் விசா தற்காலிக ரத்து – கொரோனா பரவுவதால் சவுதி அரசு நடவடிக்கை

மெக்காவிற்கு புனிதப்பயணம் செல்லும் யாத்திரிகர்களுக்கான விசாக்களை சவுதி அரேபிய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால், சென்னை மற்றும் மதுரையிலிருந்து புறப்பட இருந்தவர்களின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெக்காவிற்கு புனிதப்பயணம் செல்லும் யாத்ரீகர்களுக்கான விசாக்களை சவுதி அரேபிய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து விமான நிலையங்களுக்கும் அவசர உத்தரவு ஒன்று பிறப்பித்தது. இதன் அடிப்படையில் மதுரை விமான நிலையத்தில் சவுதி அரேபியா செல்ல விமானத்தில் தயாராக இருந்த 66 பயணிகள், வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதே போன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியா செல்ல இருந்த 170 பயணிகள், விமானத்தில் ஏறியிருந்த நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டு வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments