Wednesday, March 22, 2023
Home சினிமா சமூக ஊடகங்களில் நடிகர் அஜித்துக்கு அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இல்லை - அஜித் தரப்பு வழக்கறிஞர்

சமூக ஊடகங்களில் நடிகர் அஜித்துக்கு அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இல்லை – அஜித் தரப்பு வழக்கறிஞர்

சென்னை

டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளத்திலிருந்தும் ஒதுக்கியிருப்பவர் அஜித்.  இதனிடையே, நேற்று (பிப்ரவரி 6) மாலை ஃபேஸ்புக் பக்கத்தில் அஜித் இணைந்திருப்பதாகத் தகவல் காட்டு தீ போல் ரசிகர்கள் மத்தியில் பரவியது. மேலும், அது தொடர்பாக அஜித் கையெழுத்திட்ட அறிக்கையும் வெளியானதால் உண்மையாக இருக்குமோ என்று ரசிகர்களும் உற்சாகமானார்கள். இது தொடர்பாக அஜித் தரப்பில் இருந்து “அந்த அறிக்கை பொய்யானது” என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அஜித் தரப்பு வழக்கறிஞர் சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

சமூக ஊடகங்களில் நடிகர் அஜித்துக்கு அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இல்லை. அஜித் வெளியிட்டதாக உலாவரும் கடிதம் பொய்யானது. எந்த சமூக ஊடகங்களிலும் இணைய அஜித்துக்கு விருப்பம் இல்லை. சமூக வலைதளத்தில் எந்த ஒரு ரசிகர் பக்கத்தையும், குழுவையும் அஜித் ஆதரிக்கவில்லை.  

சமூக வலைதளங்களில் அஜித் இணைய உள்ளதாக அஜித் கடிதம் எதுவும் வெளியிடவில்லை.  தவறான கடிதத்தை வெளியிட்டு கையெழுத்து மோசடி செய்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments