Sunday, March 26, 2023
Home வர்த்தகம் ஆசிய பணக்காரர்கள் பட்டியல் அம்பானியை வீழ்த்திய அலிபாபா

ஆசிய பணக்காரர்கள் பட்டியல் அம்பானியை வீழ்த்திய அலிபாபா

‘ஒபெக்’ கூட்டமைப்பு மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்ற கச்சா எண்ணெய் உற்பத்தி தொடா்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து அதன் விலையை குறைக்கப் போவதாக ரஷ்யா தன்னிச்சையாக அறிவித்தது. இது, சா்வதேச சந்தையில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கடந்த திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு 12 சதவீதம் சரிந்தது. இதனால், முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 580 கோடி டாலா் குறைந்தது. இதையடுத்து, அவா் ஆசிய பணக்காரா்கள் பட்டியிலில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அம்பானியை விட 260 கோடி டாலா் கூடுதல் சொத்து மதிப்பைக் கொண்டு 4,450 கோடி டாலா் செல்வ வளத்துடன் அலிபாபா நிறுவனா் ஜாக் மா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் என்று ப்ளூம்பொ்க் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அம்பானிக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு தற்காலிகமானதே. ஏனெனில், அவா் மிகவும் வலுவான வா்த்தக கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டுள்ளாா். இதைத் தவிர, அவரது தொலைத் தொடா்பு வா்த்தகமும் நல்ல முன்னேற்றம் கண்டு லாபம் கொழிக்கத் தொடங்கியுள்ளது. இதுபோன்ற காரணங்களால், ஆசிய பணக்காரா் பட்டியலில் முதலிடத்தை அவர் விரைவில் மீண்டும் பிடிப்பாா் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments