Monday, December 4, 2023
Home உலகம் கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்துகிறது - சவுதி

கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்துகிறது – சவுதி

ரியாத்

சில தினங்களுக்கு முன், கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்த, சவுதி அரசின், சவுதி அராம்கோ நிறுவனம், அடுத்து, உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக, ரஷ்யாவை மிரட்டியுள்ளது. இதனால், சவுதி, ரஷ்யா இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது. கடந்த, 7ம் தேதி, மேற்காசிய நாடான சவுதி அரேபியா தலைமையிலான, கச்சா எண்எெணய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும், கிழக்கு ஐரோப்பிய நாடான ரஷ்யாவும், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு குறித்து, நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது.

இதற்கு, ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை’ என, ரஷ்யா தெரிவித்தது தான், காரணம். இதையடுத்து, சவுதி அராம்கோ, கச்சா எண்ணெய் விலையை, 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைத்தது. அத்துடன், ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, ரஷ்யா வழங்குவதை விட, நான்கு மடங்கு குறைந்த விலையில், கச்சா எண்ணெய் வழங்குவதாக, சவுதி அராம்கோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் முதல், கச்சா எண்ணெய் உற்பத்தியில், தினமும், 25 லட்சம் பீப்பாயை அதிகரிக்க உள்ளதாக, நேற்று சவுதி அராம்கோ அறிவித்தது. இதன் மூலம், ஒரு நாள் கச்சா எண்ணெய் உற்பத்தி, 98 லட்சம் பீப்பாயில் இருந்து, 1.23 கோடியாக உயரும். இதனால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை, மேலும் கடுமையாக வீழ்ச்சி அடையும்.

ரஷ்யாவுக்கு எதிராக சவுதி அராம்கோ எடுத்துள்ள நடவடிக்கையால், அமெரிக்காவின் ‘ஷெல்’ எரிபொருள் நிறுவனங்கள் மூடப்படும் அபாயமும் உள்ளது. ‘கொரோனா வைரஸ்’ பிரச்னையால், உலகளவில் தேவை குறைந்து வரும் நிலையில், சவுதி, கச்சா எண்ணெய் விலையை குறைத்து, உற்பத்தியை அதிகரிப்பது, அந்நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என, சந்தையாளர்கள் தெரிவித்தனர்.

- Advertisment -

Most Popular

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

Recent Comments