Saturday, March 25, 2023
Home வர்த்தகம் கொரோனா அச்சுறுத்தல், பறவைக் காய்ச்சல் பீதி - கறிக்கோழி விற்பனை சரிவு

கொரோனா அச்சுறுத்தல், பறவைக் காய்ச்சல் பீதி – கறிக்கோழி விற்பனை சரிவு

கோழியில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த செய்திகளால் பீதியடைந்த மக்கள் கோழி வாங்குவதை வெகுவாக குறைத்ததால் விற்பனை பாதியாகக் குறைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் கடந்த மாதம் 200 ரூபாய் வரை விற்கப்பட்ட கறிக்கோழி விலை இந்த வாரம் 100 ரூபாயாக குறைந்துள்ளது. உயிருடன் கோழி 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோழிக்கறி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 4 முட்டை இலவசமாக வழங்கப்படும் என்று அதிரடி ஆஃபர்களை வெளியிட்ட போதும் வாங்குவதற்கு ஆட்கள் வருவதில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நெல்லையிலும் கொரோனா மற்றும் பறவைக் காய்ச்சல் அச்சத்தால் கோழிக்கறி வாங்குவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். அதிக விலை கொடுத்து வாங்கிய கோழிகளை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழலுக்கு கறிக்கடைக்காரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இதனால் ஏற்பட்ட நஷ்டம் ஒருபக்கம் என்றால், விற்பனையாகாத கோழிகளை பராமரிக்க கூடுதல் செலவும் ஆவதால் என்ன செய்வதென தெரியாமல் உள்ளனர்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments