Monday, December 4, 2023
Home உலகம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் அமெரிக்கா

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் அமெரிக்கா

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைஸுக்கு,  இதுவரை ஒரு லட்சத்து 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 ஆயிரத்து 130 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சீனாவில் 3 ஆயிரத்து 213 பேர் பலியாகி உள்ளனர். அடுத்ததாக இத்தாலி நாட்டில் 2 ஆயிரத்து 158 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது பரிசோதனையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. mRNA -1273 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்தை அமெரிக்காவின் தேசிய சுகாதார மையத்துடன் இணைந்து மொடெர்னா என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இந்த மருந்தினை முதற்கட்ட பரிசோதனையாக, முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் 18 வயது முதல் 55 வயது வரை உள்ள 45 நபர்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 வாரங்களுக்கு நடைபெறும் இந்த சோதனையின் முதல் நபாராக ஒருவருக்கு இம்மருந்தானது இன்று செலுத்தப்பட இருக்கிறது.

இது குறித்து பேசியுள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், mRNA-1273 என்றழைக்கப்படும் மருந்து, சோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் கையில்தான் செலுத்தப்படும் என்றும், அவர்களுக்கு காய்ச்சல், உடல்நலக்குறைவு ஏதேனும் ஏற்படுகிறதா என கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை வெற்றி பெற்றாலும் மருந்தானது வெளிவர ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.

- Advertisment -

Most Popular

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

Recent Comments