Saturday, March 25, 2023
Home வர்த்தகம் யெஸ் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கிய அனில் அம்பானிக்கு அமலாக்க பிரிவினர் நோட்டீசு

யெஸ் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கிய அனில் அம்பானிக்கு அமலாக்க பிரிவினர் நோட்டீசு

புதுடெல்லி

இந்தியாவின் முதல் பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி. இவர்களது தந்தை மரணத்திற்கு பிறகு இருவரும் சொத்துக்களை பிரித்துக் கொண்ட நிலையில் அனில் அம்பானியின் தொழில்கள் வீழ்ச்சி அடைந்தன. பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியதால் அவர் கடும் பின்னடைவுகளை சந்தித்து வருகிறார்.

தற்போது மோசடி அம்பலமாகி இருக்கும் யெஸ் வங்கியில் அனில் அம்பானி ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார். இந்த வங்கியின் அதிபர் ராணா கபூர் பல தொழில் அதிபர்களுக்கு அதிக அளவில் கடனை அள்ளி கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த கடன் வாராக்கடன்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனங்களிடம் இருந்து ராணா கபூர் லஞ்சம் பெற்றுள்ளார். அவர் 78 போலி நிறுவனங்களை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லஞ்ச பணம் அந்த நிறுவனங்களுக்கு வந்துள்ளது.

வங்கி கொடுத்த கடன்களில் ரூ.30 ஆயிரம் கோடி வரை வாராக்கடனாக மாற்றப்பட்டிருந்தது. அதற்காக அவர் லஞ்சம் பெற்றிருக்கிறார். பெரும்பாலும் அதிக அளவில் கடன் பெற்றவர்களிடம் இருந்து இவ்வாறு லஞ்ச பணம் பெறப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் அனில் அம்பானியிடம் இருந்தும் அவர் பணம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் அமலாக்க பிரிவினருக்கு எழுந்துள்ளது. எனவே அனில் அம்பானி உள்ளிட்ட அதிக அளவில் கடன் வாங்கிய தொழில் அதிபர்களை அழைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி அனில் அம்பானிக்கு அமலாக்க பிரிவினர் நோட்டீசு அனுப்பி உள்ளனர். அதில் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது. அனில் அம்பானி இன்று ஆஜராவா? என்பது தெரியவில்லை. அவரிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் என்றும் குறிப்பிடப்பட வில்லை.

ஆனால் அனில் அம்பானி பெயர் இழுக்கப்பட்டதுமே அந்த நிறுவனம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாங்கள் யெஸ் வங்கி விவகாரத்தில் நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. யெஸ் வங்கி அதிபருக்கும், எங்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை. நாங்கள் வர்த்தக ரீதியாக முறைப்படி அவர்களிடம் கடன் வாங்கி இருக்கிறோம். இதில் தறவான நடைமுறைகள் எதுவும் கடை பிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

அனில் அம்பானி மட்டுமல்லாமல் வோடா போன் நிறுவனம், டி.எச்.எப்.எல் ரியல் எஸ்டேட் நிறுவனம், எஸ்.எல். குரூப், சி.ஜி. பவர், ஹாக்ஸ் அன்ட் ஹிங்ஸ், ரேடியஸ் டெவலப்பர், ஐ.எல்.எப்.எஸ். போன்ற நிறுவனங்களும் அதிக அளில் கடன் வாங்கி உள்ளன.

பின்னர் அவர்களுடடைய கடன் பெரும்பாலும் வாராக் கடனாக மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் அறிவிக்கப்பட்ட ரூ.30 ஆயிரம் கோடி வாரா கடனில் ரூ.20 ஆயிரம் கோடி வரையிலான பணத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று அமலாக்க பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த வங்கி வழங்கிய மொத்த கடன் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடியில் சுமார் ரூ.42 ஆயிரம் கோடி பலவீனமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் திவால் அறிவித்துள்ளன. அல்லது செயல்படாத நிலையில் உள்ளன. அதன் மூலமும் முறைகேடு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments