Wednesday, March 29, 2023
Home சினிமா மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும்

மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும்

நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படக்குழு ரிலீஸ் தேதியை இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல், ஏப்ரல் 2020 என்றே மறைமுகமாக அனைத்து போஸ்டர்களிலும் தெரிவித்து வந்தது. ஆனால், ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் என்றும் கூறப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள் இம்மாதம் 31ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

அதேபோல், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவிலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் விஜய் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் கிடைக்கும் என்பதால், அங்கும் திரையரங்குகள் திறக்கப்படும் வரை மாஸ்டர் படம் வெளியாகாது என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில் தற்போது மாஸ்டர் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மாஸ்டர் திரைப்படம், திட்டமிட்டபடி வெளியாகும். ஏப்ரல் 9-ம் தேதிக்குள் கொரோனா பாதிப்பின் நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்துள்ள படக்குழுவினர், வீட்டுக்குள் முடங்கியுள்ள மக்களை திரையரங்கிற்கு அழைத்துவரும் படமாக மாஸ்டர் இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments