Tuesday, March 21, 2023
Home உலகம் இத்தாலியில் ஒரே நாளில் 793 பேர் பலி - உயிரிழப்பு எண்ணிக்கை 4,825 ஆனது.

இத்தாலியில் ஒரே நாளில் 793 பேர் பலி – உயிரிழப்பு எண்ணிக்கை 4,825 ஆனது.

ரோம்

இத்தாலியில் கொரோனாவின் உக்கிர தாண்டவத்துக்கு ஒரே நாளில் 793 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,825 ஆக அதிகரித்துள்ளது. சீனாவை தாக்கிய கொரோனாவைரஸ் தற்போது அங்கு ஓய்ந்திருக்கிறது என கூறப்படுகிறது. ஆனால் உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது கொரோனா.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பலி கொண்ட உயிர்களின் எண்ணிக்கையும் 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக இத்தாலி தேசத்தையே கொரோனா நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. இங்கு ஒரே நாளில் 793 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,825 ஆக அதிகரித்துள்ளது

இத்தாலியில் 53,578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பிரான்சிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரான்சில் நேற்று ஒரே நாளில் 112 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்திருக்கிறது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments