Wednesday, June 7, 2023
Home இந்தியா கேரளாவில் கட்டுப்பாடுகளுடன் மது விற்பனைக்கு அனுமதி - பினராயி விஜயன்

கேரளாவில் கட்டுப்பாடுகளுடன் மது விற்பனைக்கு அனுமதி – பினராயி விஜயன்

திருவனந்தபுரம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மத்திய அரசு கடந்த 24ந்தேதி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவானது ஏப்ரல் 14ந்தேதி வரை அமலில் இருக்கும்.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,100ஐ கடந்து உள்ளது.  பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.  மராட்டியம், கேரளா மற்றும் டெல்லியில் அதிக அளவில் பாதிப்பு எண்ணிக்கை உள்ளதுடன் தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல் மந்திரி பினராயி விஜயன், கடந்த 24ந் தேதி ஊரடங்கு உத்தரவு அமலான பின்னர், மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.  இதனால் பல்வேறு பகுதிகளில் தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

எனவே, கேரளாவில் மதுவிற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி மதுபானம் வழங்க, கலால் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.  மதுபானம் கிடைக்காதது சமூக பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் ஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

இதேபோன்று மதுவிற்கு அடிமையான நபர்களை, சிறப்பு மையங்களில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments