Monday, November 27, 2023
Home வர்த்தகம் ப்ரீபெய்டு ப்ளான் வேலிடிட்டி காலத்தை நீட்டிக்க டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவு

ப்ரீபெய்டு ப்ளான் வேலிடிட்டி காலத்தை நீட்டிக்க டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவு

டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கான வேலிடிட்டி காலத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என ட்ராய் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
 
21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமலில் உள்ளது. இத்தகைய சூழலில் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கான ப்ளான் வேலிடிட்டி காலத்தை நீட்டிக்க வேண்டும் என ட்ராய் உத்தரவிட்டுள்ளது.
 
இதன் மூலம் வீட்டினுள்ளேயே இருக்கும் மக்களுக்கு இச்சேவை பெரிய உதவியாய் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
ஆன்லைன் பயன்படுத்தாமல் இதர வழிகளில் ரீசார்ஜ் செய்து வருவோருக்கு இந்த சூழல் பல சிரமங்களைத் தரும் என்பதால் இந்த நடவடிக்கையை அத்தியாவசியமானது எனக் கருத வேண்டும் என்றும் ட்ராய் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ உத்தரவை நேற்றே ட்ராய் அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் தெரிவித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது
- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments