Saturday, March 25, 2023
Home பொது மருத்துவ பணியாளர்கள் குறித்த சைக்கோக்கள் இணையத்தில் பதிவிடும் தவறான செய்தி

மருத்துவ பணியாளர்கள் குறித்த சைக்கோக்கள் இணையத்தில் பதிவிடும் தவறான செய்தி

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் கொட்டுப்போன ரத்தத்தை செலுத்தி 15 கர்ப்பிணி பெண்கள் இறந்துவிட்டதாக  செய்தி வெளியாகி உள்ளது. இதில் தேதி மார்ச் 27ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டு அதாவது கடந்த வெள்ளியன்று இந்த சம்பவம் நடந்தது போல காட்டப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ பணியாளர்களின் பணிகளை குறை கூறியும் இந்த மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. 
 
கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலையில் இவர்களின் சேவைகளை பார்த்தீர்களா என்றும் கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது? 
 
ஆனால், உண்மையைப் பார்த்தால், இந்த செய்தி வெளியிடப்பட்டது கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி. அதாவது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவத்தை, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது போல் மக்களை குழப்பும் விதத்தில்  இணையத்தில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.   
 
தற்போது நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவ பணியாளர்கள் பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் சில பொறுப்பற்ற சைக்கோக்கள், மக்களிடம் இதுபோன்ற தவறான கருத்துக்களை பரப்பி தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments